பக்கம் எண் :

8. கூளி கூறியது 89

588.

மண்டிவரு மகவருடத் தும்பால் கொங்கை
      மணாளன்வரு டக்காமம் வருமா போல
உண்டிமுதற் றொழிலொ த்து மந்த ரங்கத்
      துயர்ந்தோரு மிழிந்தோரு மொவ்வா ரொவ்வார்.

(321)
     

589.

அருட்படையு மருட்படையும் பகுத்து நோக்க
      அறிவுறுத்தி யறிவுடையோ னறிவொன் றில்லா
மருட்படையை யடுகெனத்தன் படையை யேவ
      மாயவஞ்ஞன் படைமாய்ந்த வண்ணங் கேண்மின்.

(322)
 

ஞானவினோதன் படைவீரர் அஞ்ஞன் படையை அழித்தல்

 
 

வேறு

 

590.

போர்புரி மதன்னை நிருபகன்
      பொருதடல் புரிதலும்விருதுடன்
வார்பொரு வனமுலை மடநலார்
      வஞ்சமு மாலு மடிந்தவே.

(323)
     

591.

வெவ்விய கோபனை மறனொடு
      மேவிய வின்சொல் விளைத்தெழு
செவ்விய பொறைய னழித்தனன்
      சீறிய கொலைநலை சிந்தவே.

(324)
     

592.

கெடாதுறு கின்றசந் தோடனும்
      கேள்வி யெனுஞ்சுடர் வாளினால்
விடா துறு கின்றவு லோபனை
      வீட்டின் னாசையும் வீய்ந்ததே.

(325)

588. "மக்களே போல்வர் கயவ ரவரன்ன, ஒப்பாரி யாங்கண்ட தில்" (குறள்); 'மகவருடப் பால்பயக்குங் கொங்கை யின்ப மயக்கமுயக் குறுங் கணவன் வருடும் போது, மிகவுணர்ந்தோர்க் கும்பிறர்க்குஞ் செயல்கள் பார்க்கின் வேறறினும் பாவகந்தான் வேறு வேறு" அஞ்ஞ.

590. நிருபகன் மதன்னை அழிக்கம் ஆற்றலுடையவனென்பதை 475-ஆம தாழிசை முதலியவற்றாலறியலாகும். "உருபக மகளிர்திறத்தினை மறமொ டிழிப்பொடு, நிருபகன் மதனை யழித்தன னிலவிய ரதியு மிறப்பவே" அஞ்ஞ.

591. கோபனை மறனொடும் அழித்தனன் என்க. கோபனை அடக்கும் ஆற்றல் பொறையனுக்குண்மை 500 - 505 - ஆந் தாழிசைகளாற் புலப்படும். 'பாவனு மிகலு மிரங்கலில் பாடுறு கொலையு மெரிந்தெழு, கோவனு மடைய நலம்பல கூறிய பொறையி னழிந்ததே" அஞ்ஞ.

592. 507-575 - அத் தாழிசைகளைப் பார்க்க.