593. | ஆர்தரு சோக மகிழ்ச்சியும் ஆற்றிட மோகனை யுற்றுவாழ் சீர்விவ கார பராமுகன் சீறினன் மயலு மழுங்கவே. | (326) | | | | 594. | கூர்தரு மாங்கரிப் பாவியைக் குலைகுலை யும்படி கூடியே ஏர்தரு சாந்த னழித்தனன் யானென தென்ப திறப்பவே. | (327) | | | | 595. | அன்னையை யொப்ப வுயிர்த்தொகைக் கன்புசெ யும்மவி ரோதனால் மன்னிய வன்மை மடிந்துக மாய்ந்தது மாற்சரன் வாகையே. | (328) | | | 596. | ஞானப் பெரும்படை காண்டலும் ஞாட்பிடை யேனைய பாசனார் ஊனப் பெரும்படை யோடின ஒன்றொழி யாம லுடைந்தரோ. | (329) | | ஞானவினோதன் படைவீரர் அஞ்ஞனிடங் கூறல் | | வேறு | 597. | தன்னையங் கொழிய வெல்லாஞ் சமர்க்களத் திழந்து தோற்ற மன்னையங் கொழிவி லானை வணங்கென வகுத்த போதே. | (330) | | அஞ்ஞன் விடை கூறல் | 598. | நந்துறா தஞ்ஞ னென்னும் நாமமொன் றிருக்க ஞானம் உந்துறா தெனது சேனை உடன்றெழு மென்ன லோடும். | (331) |
593. 587 - 23- ஆம் தாழிசைகளைப் பார்க்க. 594. ஆங்கரி - அகங்காரன்; “ஆங்கரிப் பரிய சாந்தியினழிந்தது” (அஞ்ஞ. ) 525 - 34 - ஆம் தாழிசைகளைப் பார்க்க. 595. 535 - 40 - ஆம் தாழிசைகளைப் பார்க்க. “உயிர்கட் கன்னை போலுமவி ரோதமெழ வாருயிரையும், தீங்கரு த்தியிடு மச்ச ரனழிந்தயரவே” அஞ்ஞ. 596. ஞாட்பு - போர்க்களம். |