606. | சிவஞான தேசிகன்பொற் றிருவடித்தா மரைவணங்கா தவஞான தேசிகனென் றவமதியா தயர்த்தனையோ. | (339) |
| | |
607. | பவக்குறும்பு தனையெறியும் பரம்பரனென் றறிந்திலையோ அவக்குறும்பு தனைமேவி யடிக்கமல மயர்த்தனையோ. | (340) |
| | |
608. | முப்பொழுது முன்னானோன் முன்னேநின் றனையாகில் இப்பொழுதே நினைந்தாவி யிழந்தனையே யிழந்தனையே. | (341) |
| அஞ்ஞன் கூற்று |
| வேறு | |
609. | துய்ய நாயனார் தொண்டர் சொலுந்தொறும் வெய்ய பாசனு மிக்கெதிர் சீறியே. | (342) |
| |
610. | ஏவு ஞான விறைவ ரெனதெதிர் மேவு போழ்தினிற் காண்டிரென் வீரமே. | (343) |
| அஞ்ஞன் ஞானரூபியாதல் |
611. | என்னச் சொன்னசொ லெங்கோன் றிருச்செவி துன்ன வின்னகை செய்து துனைவனே. | (344) |
| | |
612. | வான நாடு மகிதல முந்தொழும் ஞான வாற்ற னலத்தினைக் காட்டுவான். | (345) |
| வேறு | |
613. | ஆடியும் பாடியுந் தேவரும் அருமறை தாமுமின் றளவுமே தேடியுங் காணருஞ் சேவடி தீயவன் சென்னி சிறப்பவே. | (346) |
| | |
614. | இம்பர் மனிதர்க் கெளியவோ இருந்தவர் நான்முக னாதியாம் உம்ப ருறாவடி யறிவிலான் உச்சியின் மீது முதைத்தனன். | (347) |
606. அயர்த்தனையோ - மறந்தனையோ.
611. பி - ம். ‘செய்து துணைவனே’
614. “வெருவரு நான்முக னாதியாம் விண்ணவர் மண்ணவர் வேறுளோர், ஒருவர் பெறாவடி யுணர்விலா னுச்சியின் மீது முதைத்ததே” அஞ்ஞவதைப்.