615. | துன்பமோர் மூவகை தீர்த்தருள் சோதி சுகோதய வாரிதி இன்பமோர் மூவுல கேத்தவே ஈந்தருள் வண்ண மிசைப்பதோ. | (348) | | | | 616. | பிறிவரு மேலவர் தஞ்செயல் பிறரறி வாலறி வோமென அறியும தன்றஃ தறிவதும் அற்று முடிந்த திசையிலே. | (349) | | வேறு | 617. | எந்தைபிரான் றிருக்கடைக்கண் சாத்தி மாய இருட்டறுத்து ஞானவிளக் கேற்றுங் காலை அந்தமிலா வறிஞரென்று மறியா ரென்றும் ஆய்வதுண்டோ சுதந்தரம தடைவ ரன்றே. | (350) | | | | 618. | தண்ணருள்சேர் குரவர்பத கமலஞ் சூடத் தவமுடைய தகவுடையான் றனைவி டாது நண்ணிவரு சிமிழ்ப்பெவையு மாற்றி மாற்றான் நலம்பெற்ற திறமினிநா நவிற்று மன்றே. | (351) | | | | 619. | விருப்பு வெறுப் பவையிரண்டும் விட்டு வீடா வினையூச லாடுமகத் தெழுந்த சோகப் பரப்புமறுத் தெவற்றினையுந் திரிய நோக்கிப் பகைநொதும னட்பெவையும் பரிந்திட் டாங்கே. | (352) | | | | 620. | நோக்கரிய விடத்ததனை நோக்குந் தன்மை நோன்மையரைத் தொடுத்தெவர்க்கு நுவலொ ணாத நீக்கரிய விருட்டதனைக் கதுவ நோக்கி நினைப்பரிய கரியிட்டு நீக்கி யன்றே. | (353) |
616. “பெரியவர் தஞ்செய லாவதும் பிறரறி வாலறி வோமெனத், தெரியும தன்றது தெரிவதுஞ் செய்து முடிந்திடு திசையிலே” அஞ்ஞவதைப். 617. “செறிதரும்பிறவி முறியவந்திறைவர் திருவிளங்குகழ லருளுநாள், அறிஞரென்றுமில ரவலரென்றுமில ரவர்சுதந்தரம தடையவே” அஞ்ஞவதைப். 618. சிமிழ்ப்பு - கட்டு. 620. கரி - சாட்சி. |