(வி - ம். ) போதில் ஒரு பூவில் பயிராம் என்ற முரண்டொடைநயத்தை ஓதி உணர்க. பூவும் பயிராகும் என்ற முரணும் ஒரு பூவில் ஐந்து பூவும் என்ற நயமும் காண்க. ஒரு பூவில்-ஒரு போகத்தில். ‘மள்ளருக்கே தோன்றி வயலுற்று நட்ட’ என்றும் பாடம். (9) பள்ளன் வரவு சிந்து இராகம் : சுருட்டி. தாளம் : ஆதி. 10. | கறுக்குங் கடாய் மருப்பின் முறுக்கு மீசையும்--சித்ரக் கத்தரிகை யிட்ட வண்ணக் கன்னப் பரிசும் குறுக்கில் வழுதடி சேர்த் திருக்குங் கச்சையும்--செம்பொற் கோலப் புள்ளி் யுருமாலும் நீலக் கொண்டையும் சறுக்குந் தொறுங் குதிப்பும் சுறுக்குந் தலை--யசைப்பும் தடிசுற்றி ஏப்ப மிட்டே அடிவைப் பதும் மறுக்கும் மதுவெறிகொண் டுறுக்குஞ் சிரிப்புந் தோன்ற வடிவழகக் குடும்பன்வந்து தோன்றினானே. |
(இ - ள்.) சீற்றங் கொள்ளும் ஆட்டுக்கடாயின் கொம்பு போன்ற முறுக்கு மீசையும், அழகிய கத்தரிக்கோலால் வெட்டிவிட்ட அழகான கன்னத்துப் பக்கத்தின் எழிலும், இடுப்பில் வழுதடி என்ற ஒருவகைப் படைக்கலத்துடன் சேர்த்து இறுக்கிக் கட்டிய கச்சையும், செம் |