பக்கம் எண் :

மூலமும் உரையும்3

திருமால்

தன தன தனத் தானன தானன--
      தானத் தனனா.

1. மணி மரகதச் சோதியர் ஆதியர்
மனு மரபினிற் காவலர் கோவலர்
மறை முதல்வர்முக் கூடலர் ஏடலர்
      --வாசத் துளவோர்
அணி அரவணைத் தூயவர் மாயவர்
அடி யர்வமனப் பூரணர் காரணர்
அழ கர்பள்ளிசைப் பாவளம் நாவளம்
      --ஆகத் தருவோர்
துணி வொடுதிருத் தாள்வலி தோள்வலி
துணை யனமுதற் கூறிய தேறிய
சுரர் பதிபகைக் கீறுள வீறுள --சூரத் துடனே
பணி விடைசெயத் தானவர் வானவர்
பழ மகபதிப் பேரியல் சீரியல்
பக ரிளமுறைக் கோனென வானெறி
      --பாலிப் பவரே

(இ - ள்.) மணி மரகதம் சோதியர் ஆதியர்-சிவந்த மாணிக்கமும் பசிய மரகதமும் கலந்த ஒளி வடிவினராகிய முதல்வர், மனு மரபினிற் காவலர்-(அவ்வாறு ஒளி வடிவினராகிய முதல்வராய் இருந்தும்) மன்னர் குலத்தில் வந்து தோன்றி அரசு துறந்து கால்சிவப்ப நடந்த காவலருமாயினவர், கோவலர்-(முதன்மையை மறந்து அரசருமாகி அரசு துறந்து அலைந்ததோடல்லாமல் மன்னர் குலத்திற் பிறந்து கோவலர் குலத்தில் வளர்ந்து காட்டில் மாடு மேய்த்து அடியார்க்கு எளியனாகிய) கண்ணனுமானவர், மறைமுதல்வர்-இவ்வாறு எளிய