வேற்றுமைத் தொகை சூ. 17 | 113 |
என்பது உலகத்துள்ளார்க்குப் பெயராகி ‘உவப்ப’ என்னும் செய வென்னெச்சத்தோடு முடிந்தது. ‘வலனாக’ என்னும் எச்சத்துக்கண் ‘ஆக’ என்பது செய்யுள் விகாரத்தால் தொக்கு நின்ற காலத்தும் அதற்கு இயல்பு முற்பட்ட நிலைமையென்று கொள்க. என்போல வெனின், வாலும் செவியும் இழந்த ஞமலியைப் பின்னும் ஞமலி என்றே வழங்கினாற் போல. ‘உவப்ப, வலனாக’ என்னும் செயவென் எச்சமும், ‘ஏர்பு’ என நிகழ்காலம் குறித்த செயவென் எச்சமும் ‘திரிதரு’ என்னும் பெயரெச்சத்தோடு முடிந்தன. ‘பலரால்’ என்னும் மூன்றாம் வேற்றுமை ஏற்ற பெயர் உருபு தொக வருதல் என்னும் இலக்கணத்தால் தொக்குப் ‘பலர்’ என நின்றது. அது ‘புகழப்பட்ட என்பதற்கு அடையாகி நின்றது. அடையெனினும் விசேடணம் எனினும் ஒக்கும். ‘புகழப்பட்ட’ என்னும் பெயரெச்சம் ‘உண்சோறு’ என்றாற்போலப் பொருள் மேல் வந்து வினைத்தொகையாகிப் ‘புகழ் ஞாயிறு’ என ஒட்டி ஒரு சொல்லாகி நின்றது. அது ‘திரிதரு’ என்னும் பெயரெச்சத்திற்கு முடிபாயிற்று. ‘ஞாயிறு’ என்பதற்கு முன்னுள்ள சொல்லெல்லாம் தொகுத்து நோக்க ஞாயிற்றிற்கு அடையாகி நின்றன. ‘ஞாயிற்றை’ என்னும் உருபு தொக்கு நின்றது. ‘கடலின்கண்’ என்னும் உருபு தொக்கு நின்றது. ‘கண்டாங்கு’ என்பது கண்டாற் போலும் என்னும் உவமப் பொருள் உணர நின்றது. இத்துணையும் உணர்த்தப்பட்டது ‘உதய ஞாயிறு போல’ என்னும் பொருண்மை. ‘ஓவற, என்பது - ஓவு ஒழிவு. அற என்பது இல்லையாக என்னும் செயவென் எச்ச வாய்பாடு. அதற்கு ஓவு என்பது அடையாகி நின்றது. ‘அற’ என்பது ‘இமைக்கும்’ என்னும் பெயரெச்சத்தோடு முடிந்தது. ‘சேணின்கண்’ என்பது ‘சேண்’ என உருபு தொக்கு நின்றது. அது ‘விளங்கும்’ என்பதற்கு அடையாகி நின்றது. ‘அவிர்’ என்பது விளக்கத்தின் மிகுதியைக் குறித்து வந்து ‘ஒளி’ என்னும் பெயரோடு வினைத்தொகையாகி, ‘அவிரொளி’ என ஒரு சொல்லாயிற்று. அது ‘விளங்கு’ என்பதனோடு ஒட்டி வினைத் தொகையாகி, ‘விளங்கவிரொளி’ என ஒரு சொல் நீர்மைப்பட்டது. அஃது ‘இமைக்கும் என்னும் பெயரெச்சத்திற்கு முடிபாயிற்று. உலகம் என்பது முதலாக இத்துணையும் கூறப்பட்டது, ‘ஞாயிறு போல் விளங்கும் ஒளி’ என ஒளிக்கு அடைகூறுதலான் அவ்வொளியோடே எல்லாச் சொல்லும் முற்றி நின்றன. ‘உறுநரை என்பது ‘உறுநர்’ என உருபு தொக்கு நின்றது. ‘தாங்கிய |