வேற்றுமைத் தொகை சூ. 17 | 117 |
பொருந்தும், நிலங்கடந்தான் என்பதில் கடந்தான் என்பது வினை முற்றாக இருப்பின் இரண்டாம் வேற்றுமைத் தொகை என்பதில் தெய்வச்சிலையார்க்கு மாறுபாடில்லை. அது வினையாலணையும் பெயராக வரும் போது தான் நிலத்தைக் கடந்தான் என வரலாகாது என்பதே அவர்கருத்து. உவமத் தொகை 408 : | உவமத் தொகையே யுவம வியல் (18) | | | | (உவமத் தொகையே உவம இயல). |
ஆ. மொ. இல. Simile-Compound is in the nature of a simile. பி. இ. நூ. நன். 366 உவம வுருபிலது உவமத் தொகையே. இ. வி. 337 உவமத் தொகையே உவம இயல. முத்து. ஒ. 98 உவம உருபிலது உவமத் தொகையே. இளம் இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், நிறுத்த முறையானே உவமத்தொகை உணர்த்துதல் நுதலிற்று. உரை : உவமத் தொகைக்கண் அவ்வுருபு தொக்கு நின்றாலும் அவ்வுருபு விரிந்தாங்கே பொருள்படும், எ-று. உவமம் தொகுங்கால் வினை, பயன், மெய், உரு என்ற நான்கும் பற்றித் தொகும். |