பக்கம் எண் :

128தொல்காப்பியம்-உரைவளம்

பி. இ. நூ.

நன். 364

காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை

இ. வி. 338

வினையின் தொகுதி காலத் தியலும்

முத்து. ஒ. 96.

காலங் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை

இளம்

உரை : வினைச் சொல் தொகுங்கால் காலந்தோன்றத் தொகும், எ-று.

காலத்தியலும் என்றது எக்காலும் காலமுடையவாய் இயலும் என்றவாறு.

வ-று : கொல்யானை என்பது கொன்றயானை;

கொல்யானை-கொல்லா நின்றயானை; கொல்யானை-கொல்லும்யானை என மூன்று காலத்திற்கும் அதுவே வாய்பாடு. பிறிதில்லை.

மற்றுக் 1கொல்யானை என்றானேல் நிகழ் காலமும் அறியலாம்; கொல்லிய ஓடுவதனைக் கண்டு ‘கொல்யானை’ என்றானேல் எதிர் காலம் என்பது அறியலாம். பிறவு மன்ன.

சேனா

இ-ள் : வினைத் தொகை காலத்தின்கண் நிகழும், எ-று.


1. கொல்லும்யானையைக்கண்டு கொல்யானை என்றானேல் இத்தொடர்க்கு முன்னர் “கொன்று ஓடும் யானையைக்கண்டு கொல்யானை என்றானேல் இறந்தகாலம் என்பது அறியலாம்” என்னும் தொடர் இருந்திருத்தல் வேண்டும்-சிவ.