சொல்லையும் கருதி எண்ணும் நிலையினது (எண்ணிடைச்சொல்லாகிய உம்மை தொக்கு நின்ற) உம்மைத் தொகையாம், எ-று. ................................................. வேற்றுமைத் தொகை முதலாயின பல சொல்லாற் றொகுதல் சிறுபான்மை; அதனால் உம்மைத்தொகை இருசொல்லானும் பல சொல்லானும் தொகும் என்பதற்கு ‘இருபெயர் பலபெயர்’ என்றார். ஆதி உ-ம் | இருபெயர் | : | உவாப்பதினான்கு-உவாவும் பதினான்கும் என விரியும். | | பலபெயர் | : | புலிவிற்கெண்டை-புலியும் வில்லும் கெண்டையும் என விரியும். | அளவின்பெயர் | : | தூணிப்பதக்கு-தூணியும் பதக்கும் என விரியும் | எண்ணியற் பெயர் | : | முப்பத்து மூவர்-முப்பதின்மரும் மூவரும் என விரியும். | நிறைபெயர் | : | தொடியரை-தொடியும் அரையும் என விரியும். தொடி என்பது பலம்என்னும் நிறையினைக் குறித்த பெயர். | எண்ணின் பெயர் | : | பதினொன்று-பத்தும் ஒன்றும் என விரியும். |
ஆதி உ-ம் : | கபில பரணர் | | சேர சோழ பாண்டியர் | நாழி ஆழாக்கு, ஒரு கோட்டை ஒரு மரக்கால் | அறுபத்து நான்கு கலைகள், ஈரேழு உலகத்தும். | அரையரைக்கால், ஒரு கிலோ பத்துகிராம். | பதினொன்று இருபத்தேழு. |
உம்மை + ஐ : ஐ சாரியை. ஆகவே உம்மை-உம். |