ஆ. மொ. இல. The expression by which subjects which do not have the capacity of coming are said to have come and those which cannnot speak are said to have spoken and such modes of expression are the ways indicating what their nature is. பி. இ. நூ. நன். 409 கேட்குந போலவும் கிளக்குந போலவும் இயங்குந போலவும் இயற்றுந போலவும் அஃறிணை மருங்கினும் அறையப் படுமே. இ. வி. 347 (தொல்காப்பியச்சூத்திரமே) முத்து ஒ. 105, 114 வாரா மரபின வரஇயம் புதலும் என்னா மரபின எனஇயம் புதலும் அன்னவை யெல்லாம் அவற்றவற் றியல்பான் இன்ன வென்னும் குறிப்புரை யாகும் கேட்குந போலவும் கிளக்குந போலவும் இயற்றுந போலவும் இயங்குந போலவும் அஃறிணை மருங்கினும் அறையப்படுமே. இளம் இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், மேல் தொகையதிகாரங் கூறினான், அவையெல்லாம் விட்டு இனி, ஒரு சொல் மரபு வழூஉக் காத்தல் நுதலிற்று. உரை : இயங்காதவற்றை இயங்குவது போலச் சொல்லுதலும், சொல் நிகழாதவற்றைச் சொல் நிகழ்த்துவன போலச் சொல்லுதலும், அவ்வப் பொருளியைபு பற்றி அவை அன்ன செய்கையுடையவற்றைப் போலச் சொல்லுற்றான்; அது மனக்குறிப்பினான் ஆய்ந்து, அவற்றது உரையன்று என்பது கொள்க. |