பக்கம் எண் :

24தொல்காப்பியம்-உரைவளம்

இருவருக்கும் உரித்தாக ஒருவர் என்றோர்

   இயற்சொல் இலதெனின் மற்றென்சொல் கேனே
   (குமரகுருபரர்-சிதம்பரச் செய்யுட்கோவை. 54)

என்ற பாடலில் இயற்சொல் என்ற கலைச் சொல் திரிசொல்லாகச் செய்யுளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

(சொல்லிலக்கணக் கோட்பாடு தொல்காப்பியம் முதற் பகுதி (பக்-84-85) 1984. அனைத்திந்தியத் தமிழ் மொழியியல் கழகம், அண்ணாமலைநகர்)

திசைச்சொல் இலக்கணம்

394. செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தினுந
  தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி.      (4)
  
  (செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தினும்
தம்குறிப் பினவே திசைச்சொல் கிளவி)

ஆ. மொ. இல.

‘Thisaiecol’ or the dialectal words are
those which are spoken with their meanings
unchanged in the twelve divisions of
Tamil land where correct Tamil is in use.

பி. இ. நூ :

நன். 273.

செந்தமிழ் நிலம்சேர் பன்னிரு நிலத்தினும்
ஒன்பதிற் றிரண்டினில் தமிழொழி நிலத்தினும்
தங்குறிப் பினவே திசைச்சொல் என்ப

இ. வி. 174  ௸  ௸   ௸ 

முத்து ஓ 52.

செந்தமிழ் நிலனைச் சேர்ந்த ஈராறு
நிலத்தினும் தங்குறிப்பின திசைக்கிளவி.