பக்கம் எண் :

எச்சவியல் சூ. 425

இளம்

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், நிறுத்தமுறையானே திசை்சொல் இவையென இலக்கணத்தாற் பகுத்து உணர்த்துதல் நுதலிற்று.

உரை : செந்தமிழ் நாட்டை 1அடையும் புடையும் கிடந்த பன்னிரு நிலத்தார்தம் குறிப்பினையே இலக்கணமாகவுடைய திசைச்சொற் கிளவிகள். எ-று.

வரலாறு : தாயைத் ‘தள்ளை’ என்ப குடநாட்டார்
 நாயை ‘ஞமலி’ என்ப பூழிநாட்டார். பிறவும்
 அன்ன.

செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலமாவன :

2பொதுங்கர் நாடு. தென்பாண்டிநாடு, ஒளிநாடு, குட்டநாடு, பன்றிநாடு, கற்காநாடு, சீதநாடு, பூழிநாடு, மலைநாடு, அருவாநாடு, அருவா வடதலைநாடு, 3குடநாடு என இவை-

‘தங்குறிப்பினவே’ என்றது அவை ஒரு வாய்பாட்டவே யல்ல; தத்தம் மரபினும் பின் வேறு வேறு வாய்பாட்ட என்றற்கும், அவர் எவ்வாறு குறித்து வழங்கினாரோ அஃதே அவற்றிற்கு இலக்கணம் என்றற்கும் என்பது.

சேனா.

இ-ள் : செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரண்டு நிலத்துந் தாங் குறித்த பொருள் விளக்குந் திசைசொல், எ-று என்றது. அவ்வந்நிலத்துத் தாம் குறித்த பொருள் விளக்குவதல்லது. அவ்வியற்சொல் போல எந்நிலத்தும் தம் பொருள் விளக்கா என்றவாறாம்.

பன்னிரு நிலமாவன : பொங்கர்நாடு, ஒளிநாடு, தென்பாண்டி நாடு, குட்ட நாடு, குடநாடு, பன்றிநாடு, கற்காநாடு, சீதநாடு.


1. அடையும் புடையும் கிடந்த - அடைந்தும் (சேர்ந்தும்) பக்கத்தும் கிடந்த

2. பொங்கர்நாடு-சேனா, பாடம்

3. சில பிரதிகளில் இது வெற்றிடமாக விடப்பட்டுள்ளது என்னும் கழகப்பதிப்பு (1973)