வெள் இது மேலதற்கோர் புறனடை. இ-ள் : அவையல் ‘கிளவியை மறைத்துச் சொல்லுங்கால் தொன்றுதொட்டு மருவி வழங்கியதனை மறைத்தலை நீக்குக, எ-று. உ-ம் : ‘மெழுகும் ஆப்பி கண்கலுழ் நீரானே’, ஆப்பி நீர் எங்குந் தெளித்துச் சிறுகாலை’ யானையிலண்டம்’, ‘யாட்டுப் பிழுக்கை’ என வரும். ஆதி அவையல் கிளவியை மறைத்துச் சொல்லும் முறையில் வாலாயமாக வரும் முறையை நீக்க வேண்டாம். சிறுநீர்கழிக்க - கொல்லைக்கு - வெளிக்கு என்ற வழக்க முறையைக் கைவிடலாகாது. இரப்புச் சொற்கள் 438. | ‡ஈதா கொடுவெனக் கிளக்கு மூன்று | | மிரவின் கிளவி *யாகிட னுடைத்தே (48) | | | | (ஈ தாகொடு எனக் கிளக்கும் மூன்றும் இரவின் கிளவி ஆகு இடன் உடைத்தே) |
ஆ. மொ. இல. ‘I’ ‘tha’ and ‘Kodu’ - these threeare used words of begging. பி. இ. நூ. நன். 407 (சூ. 451-ல் காண்க)
‡ இதுமுதல் நான்கு சூத்திரங்களையும் ஒரே சூத்திரமாகக் கொள்வர் தெய்வச்சிலையார். * ‘ஆகிடனுடைய’ என்பது இளம்பூரணரை யொழிந்த பிறர் பாடம். |