பக்கம் எண் :

342தொல்காப்பியம்-உரைவளம்

செய்யாய்

444. செய்யா யென்று முன்னிலை வினைச்சொல்
  செய்யென் கிளவி யாகிட னுடைத்தே       (54)
  
 (செய்யாய் என்னும் முன்னிலை வினைச்சொல்
செய்என் கிளவி ஆகுஇடன் உடைத்தே)

ஆ.மொ. இல.

‘ Seyyay’ the verb of the second person
may become ‘sey’ sometimes.

பி. இ. நூ.

இ. வி. 353.

முத்து. ஒ. 116
  தொல். சூத்திரமே.

பிரேயா. 46

செய்யாய் எனல் செய் எனக் குன்றுமே.

இளம்

இச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின், இது வினையியலுள் ஒழிந்து நின்ற ஒழிபு உணர்த்துதல் நுதலிற்று.

1உரை : ‘செய்யாய்’ என நின்ற முன்னிலை வினைச்சொல் ‘செய்’ என்னும் சொல்லும் ஆம்இடன் உடைத்து, எ-று.


1. “செய்யாய் என்னும் முன்னிலை எதிர் மறை வினைச்சொல் செய்வாய் என்னும் உடன்பாடு முன்னிலை. வினைச்சொல்லாகும் இடம் உண்டு” என்பது இவ்வுரையின் கருத்து. தெய்வச்சிலையார், நச்சினார்க்கினியர் கருத்தும் இதுவே.