பக்கம் எண் :

358தொல்காப்பியம்-உரைவளம்

இனி ஒருசாரார் உரை ; இன்ன அநுவதிக்குங் கால மாமக்காலத்து அவை வழுவன்மை எல்லா ஆசிரியர்க்கும் உடம் பாடாகலின் அதனைத் தழுவிக் கொண்டவாறென்க.

இவை யிரண்டும் இச்சூத்திரத்திற்குப் பொருளாகக்கொள்க.

2இனி நன்றென முடித்தலாற் புதியன தோன்றினாற்போலப் பழையன கெடுவனவும் உளவெனக்கொள்க. அவை அழான் புழான் முதலியனவும் எழுத்திற் புணர்ந்த சொற்கள் இக்காலத்து வழங்காதனவுமாம்.

தெய்

இது வினைச் சொற்கண் வருவதோர் வழுவமைதி யுணர்த்துதல் நுதலிற்று.

இ-ள் 1மேற் சொல்லப்பட்ட இலக்கணத்தான் வந்தில வெனக்கடியப்படா; அவ்வினைச் சொற்கள் காலத்தொடு பொருந்தின், எ-று.

காலமாவது இறந்த காலம் நிகழ்கால் எதிர்காலம். காலப் பொருண்மை மயங்காமல் வரின் ஈறுதிரியினும் அமைக என்றவாறு.

உ-ம் : 2மறம்பாடிய பாடினியும்மே
 பேருடைய விழுக்கழஞ்சிற்
சீருடைய விழை பெற்றிசினே
இழை பெற்ற பாடினிக்குக்
குரல் புணர்சீர் கொளைவல் பாண்மக னும்மே
என வாங்கு
ஒள்ளழற் புரந்த தாமரை
வெள்ளி நாராற் பூப் பெற் றிகினே       (புறம். 31)

2. இது இளம்பூரணரின் முதல் உரை உதாரணத்துக்குரியது.

1. இவ்வுரை மற்றையோர் உரையின் வேறுபட்டது.

2. பொருள் :