பருப்பதம் என்றாற் போல்வன பின்னுள்ளோர் செய்யுட்கண் திரிந்து ஏற்கும் எழுத்துகளால் மருவி வந்தன. இனி, சிதைந்தன வரினும் எனப் பொதுப்படக் கூறியவதனால், ஆணை, வட்டம், நட்டம், கண்ணன் எனப் பாகதமாகச் சிதைந்தனவும் கொள்க. வெள் இதுவும் அது. இ-ள் : பொது வெழுத்தான் இயன்றனவேயன்றி வடமொழிச் சிறப்பெழுத்தாலாகிய சொற்களும் தமிழ் ஒலிக்கு இயைந்தனவாகச் சிதைந்துவரின் அவற்றையும் நீக்காது ஏற்றுக் கொள்வர் ஆசிரியர், எ-று. ‘இயைந்தன வரையார்’ எனவே, தமிழ் ஒலிக்கு இயையாதன நீக்கப்படும் என்பதாம். உ-ம் : | ‘அரமிய வியலகத் தியம்பும்’ | | ‘தசநான் கெய்திய பணைமருள் நோன்றாள்’ ‘வாதிகை யன்ன கவைக்கதிர்’ ‘கடுத்தோ ரிராமன் உடன்புணர் சீதையை வலித்தகை யரக்கன்’ |
என்றாற் போல்வன சான்றோர் செய்யுட்கண் சிதைந்து வந்தன. ‘சிதைந்தன வரினும்’ எனப் பொதுப்படக் கூறியவதனால் ஆணை, வட்டம், நட்டம், கண்ணன் எனப் பாகதமாகச் சிதைந்தனவும் கொள்ளப்படும். ஆதி வடசொற்கள் தம்முறையிற் சிதைந்துவரினும் தமிழ் முறைக்கு இயைந்தவற்றை நீக்கமாட்டார் ஏற்று நிற்பர். இராவணா - இராவணன் என உருச் சிதைந்து வருகிறது. விபீஷணா - வீடணன் எனச்சிதைந்து வருகிறது. ஆயினும் தமி்ழ் நடைக்கு இயைந்து வருவதால் அவை தமிழாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. |