ஆற்றுப்படையில் முன்னிலையொருமை முடிபு சூ. 65 | 421 |
நின்னீர வல்ல நெடுந்தகாய்” (கலி. 6) எனவும் வரும். பிறவுமன்ன. நச் இஃது ஆற்றுப்படைக்கண் முன்னிலை யொருமை பன்மையொடு முடிக என்கின்றது. இ-ள் : முன்னிலை சுட்டிய ஒருமைக் கிளவி-முன்னிலை யிடத்தைக் கருதின ஒருமைப்பெயர், பன்மையொடு முடியினும் வரைநிலை இன்று-பன்மைச் சொல்லோடு முடியினும் நீக்கும் நிலை இன்று, ஆற்றுப்படை மருங்கிற் போற்றல் வேண்டும்-அம்முடிபு ஆற்றுப்படைச் செய்யுளிடத்துச் சுற்றத்தார் தலைவனை ஆற்றுப்படுத்தற் கண்ணதாகப் பாதுகாத்து உணர்த்தல் வேண்டும், எ-று. உ-ம் : கூத்தராற்றுப் படையுள் ‘கலம்பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ’ எனநின்ற ஒருமைச் சொல் முடிவுழி, ‘இரும்பே ரொக்கலொடு பதமிகப் பெறுகுவிர்’ என்னும் பன்மையொடு முடிந்தவாறு காண்க. இவ்விரண்டு சூத்திரத்தானும் கூறிய மயக்கம் சிறு வரவிற்றாய் இலக்கணவழக்கு உண்மையின், ‘பான் மயக்குற்ற’ (கிளவி. 23) என்னும் சூத்திரத்தால் கூறிய ஒருமை பன்மை வழுவமைதி யாகிய இலக்கண வழக்கோடு உடன் வையாது ஈண்டு வைத்தார். வெள் இது செய்யுட் குரியதோர் முடிபு கூறுகின்றது. இ-ள் : முன்னிலை குறித்து நின்ற ஒருமைச் சொல், பன்மையொடு முடிந்தாயினும், நீக்கப்படாது; அம் முடிபு ஆற்றுப்படைச் செய்யுளின்கண் போற்றியுணரப்படும், எ-று. ‘ஆற்றுப்படைமருங்கின்’ எனப் பொதுவகையாற் கூறினாராயினும், சுற்றத் தலைவன் ஒருவனை நோக்கி அவனது சுற்றத்துடன் ஆற்றுப்படுத்தற்கண் வருவது இவ் ஒருமை பன்மை மயக்கம் என்பதனைக் குறித்துணர்க என அறிவுறுத்துவார் ‘ஆற்றுப்படை மருங்கிற் போற்றல் வேண்டும்’ என்றார். |