பக்கம் எண் :

எச்சவியல் சூ. 749

உ-ம் : குறுந்தாட்கோழி எனற்பாலது ‘குறுத்தாட்கோழி’ எனவருதல் வலிக்கும்வழி வலித்தல். ‘குற்றியலுகரம்’ என்பது ‘குன்றியலுகரம்’ எனவருதல் மெலிக்கும் வழி மெலித்தல். ‘தண்டுறைவன், எனற்பாலது ‘தண்ணந்துறைவன்’ என வருதல் விரிக்கும் வழி விரித்தல். ‘மழவரை ஒட்டிய’ என : உருபு விரிந்து வரற்பாலது ‘மழவர் ஓட்டிய’ என வருதல் தொகுக்கும் வழித்தொகுத்தல், ‘விடுமின்’ எனற்பாலது ‘வீடுமின்’ என வருதல் நீட்டும் வழி நீட்டல். ‘தீயேன்’ எனற்பாலது ‘தியேன்’ என வருதல் குறுக்கும் வழிக்குறுக்கல்.

ஆதி

உ-ம் : கன்று ஆ - கற்றா - வலித்தல்
 வெற்றி - வென்றி - மெலித்தல்
 மனிதர் - மனித்தர் - விரித்தல்
 செய்கஎன - செய்கென - தொகுத்தல்
 நிழல் - நீழல் - நீட்டல்
 ஆறுவகை - அறுவகை - குறுக்கல்

சிவ

வலிக்கும் வழி வலித்தல் முதலிய யாவும் இலக்கணத்துக்கு மாறாக அமைக்கப்படுவன என்பதும் அவை வழுவாயினும் செய்யுளின்பம் நோக்கி அமைக்கப்பட்டன என்பதும் கொள்க ஆதித்தர் குறுக்கலுக்குக் காட்டிய உதாரணம் பொருந்தாது.

பொருள்கோள் வகை

398. நிரனிறை சுண்ண மடிமறி மொழிமாற்
 *றவைநான் கென்ப மொழிபுண ரியல்பே       (8)
  
 (நிரல் நிறை சுண்ணம் அடிமறி மொழிமாற்று
அவை நான்கு என்ப மொழிபுணர் இயல்பே)

ஆ. மொ. இல.

The scholars say that the syntax in poetry is of
four kinds which are ‘Niral nirai’, ‘Sunnam’
‘Adimari’ and Molimarru.


* எனநான் கென்ப பொருள்புணரியல்பே-தெய்-பாடம்.