பக்கம் எண் :

52தொல்காப்பியம்-உரைவளம்

வெள்

இது, செய்யுளகத்து மொழிபுணரியல்பாகிய பொருள்கோள் இவையெனக் கூறுகின்றது.

இ-ள் : மேற்குறித்த நான்கு சொல்லும் செய்யுளிடத்துத் தம்முட் புணரும் முறைமை நிரனிறையும் சுண்ணமும் அடிமறியும் மொழிமாற்றும் என நான்கென்று சொல்லுவர் ஆசிரியர், எ-று.

‘மொழிபுணரியல்பு நிரனிறை, சுண்ணம், அடிமறி, மொழி மாற்று ஆகிய அவை நான்கு என்ப’ என இயையும். ‘செய்யுளிடத்து’ என்பது அதிகாரத்தான் வந்து இயைந்தது.

நிரல்நிறைப் பொருள்கோள்

399. அவற்று
  ணிரனிறை தானே
  வினையினும் பெயரினு நினையத் தோன்றிச்
  சொல்வேறு நிலைஇப் பொருள்வேறு நிலையல்      (9)
  
  (அவற்றுள்,
நிரல்நிறை தானே
வினையினும் பெயரினும் நினையத் தோன்றிச்
சொல்வேறு நிலைஇப் பெயர் வேறு நிலையல்)

ஆ. மொ. இல.

of them,
‘Niral nirai’ is the mode in which the words
stand in a group of verbs and nouns
separately in such a way as to join the
predicates or governing words to the
subjects or the words governed in respective order.

பி. இ. நூ.

நன். 414

பெயரும் வினையுமாம் சொல்லையும் பொருளையும்
வேறு நிரல் நிறீஇ முறையினும் எதிரினும்
நேரும் பொருள்கோள் நிரனிறை நெறியே.

இ. வி. 364  ௸  ௸   ௸