பக்கம் எண் :

அடிமறிப் பொருள்கோள் சூ. 1165

இளம்

இச்சூத்திரத்தில் என்னுதலிற்றோவெனின், அடிமறிப் பொருள் கோளாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

உரை : அடிமறி என்று சொல்லப்படுவது சீர் கிடந்துழியே கிடப்ப, அடிகள் முதலும் இடையும் கடையும் படச்சொல்லிக் கண்டு கொள்க.

சேனா

இ-ள் : அடிமறிச் செய்யுளாவது சீர் நின்றாங்கு நிற்ப அடிகள் 1தத்த நிலையிற் றிரிந்து ஒன்றன் நிலைக்களத்து ஒன்று சென்று நிற்கும், எ-று.

எனவே, எல்லா வடியும் யாண்டுஞ் செல்லும் என்பதாம்.

2உ-ம் :மாறாக் காதலர் மலைமறந் தனரே
 யாறாக் கட்பணி வரலா னாவே
வேறா மென்றோள் வளைநெகி ழும்மே
கூறாய் தோழி யான்வாழு மாறே.

எனவரும். இதனுள் சீர் நின்றாங்கு நிற்பப் பொருள் சிதையாமல் எல்லாவடியுந் தடுமாறியவாறு கண்டு கொள்க.

பெரும்பான்மையும் நாலடிச் செய்யுட்கண் அல்லது இப் பொருள்கோள் வாராதென்க.

நிரனிறைதானே; சுண்ணந்தானே, மொழிமாற்றியற்கை என்பனபோல ஈண்டும் “அடிமறிச் செய்தி” யென்பதனைக் குறளடியாக்கி “அடி நிலை திரிந்து சீர்நிலை திரியாது தடுமா


1. தத்த நிலையிற்றிரிதலாவது வரிசையில் மாறுபடுதல்.

2. பொருள் : தோழீ! நம்மிடம் அன்பு மாறாத் தலைவர் நம் மறந்தார்; அதனால் என் கண்ணீர் ஆறாக வருதல் ஒழியாது; என் மென்ற தோளிலிருந்து தனியாக வளை நெகிழும்; இனியான் வாழுமாறு கூறாய்.