பக்கம் எண் :

எச்சவியல் சூ. 29

இயற்சொல் இலக்கணம்.

392. அவற்று
 ளியற்சொ றாமே
 ளியற்சொ றாமே
  தம்பொருள் 1வழாஅமை யிசைக்குஞ் சொல்லே       (2)
  
 (அவற்றுள்,
இயற்சொல் தாமே
செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித்
தம் பொருள் வழா அமை இசைக்கும் சொல்லே)

ஆ. மொ. இல.

Of them.the ‘Iyarcol’ words are those which are
Used in conformity with the usage of
Tamil Land without change in their meanings.

பி. இ. நூ

நள். 271

செந்தமி ழாகித் திரியாது யார்க்கும்
தம்பொருள் விளக்கும் தன்மைய இயற்சொல்.

இ.வி. 172  ௸  ௸   ௸

தொ. வி. 43

இயற்சொல் என்பது இயல்பில் திரிபிலா
தான் எளிது எவர்க்கும் தன்பொருள் விளக்கவே.

முத்து. ஓ 49.

அவற்றுள்
செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித்
தம்பொருள் விளக்கும் தன்மைய இயற்சொல்

இளம்

என்பது சூத்திரம் என்னுதலிற்றோவெனின், மேல் நிறுத்த முறையானே இயற்சொல்லை யின்ன வென்று இலக்கண முறைமையாற் பகுத்து உணர்த்துதல் நுதலிற்று.


1. வழாமை-பாடம் (சேனா.நச்.) வழாமல்-தெய்.பாடம்.