பக்கம் எண் :

92தொல்காப்பியம்-உரைவளம்

அடுக்கு ஒரு சொல்லது விகாரம் எனப்படும். இரண்டு சொல்லாயின் இருபொருள் உணர்த்துவது அல்லது இப்பொருள் வேறுபாடு உணர்த்தாமையின் என்பது.

தெய்

ஒரு பொருள் மேல் ஒருசொல் அடுக்கி வரு வழி வரும் வேறுபாடு உணர்த்துல் நுதலிற்று.

இ-ள் : ஒரு சொல்மேல் அடுக்கி வருஞ் சொல் இசை நிறைவாகி அடுக்குதல், அசை நிலையாகி யடுக்குதல், பொருளொடு புணர்ந்து வருதல் என மூவகைய என்ப ஆசிரியர், எ-று.

ஒரு சொல்லடுக்கு எனப் பொதுவாக ஓதினமையாற் பெயர் முதலாகிய நான்குசொல்லும் அடுக்கப் பெறும் என்று கொள்க.

*உ-ம் : 1துறக்குவ னல்லன் துறக்குவ னல்லன்
 நுதொடர்வரை வெற்பன் துறக்குவ னல்லன்
தொடர்புள் இனையவை தோன்றின் விசும்பிற்
சுடருள் இருள்தோன்றி யற்று.       (கலி. 41)

இதனுள் முந்துற்ற சொற்பொருள் உணர்த்திற்று. ஏனைய இசைநிறைக்கண் வந்தன.

இசைநிறையாவது பாட்டுக்குறித்து வரும். அசைநிலை செய்யுளின்பங் குறித்து வரும்.

“குறங்கென மால்வரை யொழுகிய வாழை வாழைப்
பூவெனப் பொலிந்த வோதி”       (புறம். 67)


* பொருள் : தொடர்ந்தமலையடுக்கத்தையுடைய வெற்பன் (தலைவன்) நம்மைத் துறக்கமாட்டான்; அப்படி நம்மிடையுள்ள நட்பில் துறத்தல் என்பது அவனிடம் தோன்றின் அது சூரியனிடம் இருள் தோன்றியது போலாம்.

முந்துற்றசொல்-துறக்குவன் அல்லன் என்பது ஏனைய-மற்றை இரண்டு.