பக்கம் எண் :

654மரபியல்

[பெட்டை என்னும் பெயர்க்குரியன இவை எனல்]

607.ஒட்டகங் குதிரை கழுதை மரையிவை
பெட்டை யென்னும் 1பெயர்க்கொடைக் குரிய.

இ--ள் : ஒட்டகமுங் குதிரையும் கழுதையும் மரையாவும் பெட்டையென்னும் பெயர்பெறும் என்றவாறு.

ஒட்டகப்பெட்டை குதிரைப்பெட்டை கழுதைப்பெட்டை மரையான்பெட்டை என வரும்.

(52)

[அப்பெயரைப் புள்ளும் பெறுமெனல்]

608. புள்ளு முரிய வப்பெயர்க் கென்ப.

இ--ள் : எல்லாப் புள்ளும் பெட்டையென்னும் பெயரான் வழங்குதற்குரிய என்றவாறு.

அவை, கோழிப்பெட்டை மயிற்பெட்டை என வரும். பிறவும் அன்ன.

(53)

[பேடையும் பெடையும் புள்ளுக்குரிய எனல்]

609.பேடையும் பெடையு நாடி னொன்றும்.

இ--ள் : பேடையும் பெடையு மென்னும் இரண்டும் முன்னர் நின்ற புள்ளிற்கு 2ஒன்றும் என்றவாறு.

அவை, குயிற்பேடை, அன்னப்பெடை என வரும். ‘நாடின்’ என்றதனாற் பெட்டையென்பது வழக்கினுட் பயிலாவென்பது.

(54)

[அளகென்னும் பெயர் இவைக்குரிய எனல்]

610.கோழி கூகை யாயிரண் டல்லவை
சூழுங் காலை யளகென லமையா.
(55)
611. அப்பெயர்க் கிழமை மயிற்கு முரித்தே.

இ--ள் : கோழியும் கூகையும் மயிலு மென்பனவற்றுக்கு அளகென்னும் பெயர் உரியது என்றவாறு.


1. பெயர்க்கொடைக்கு -- பெயரைத் தமக்குக் கொடுத்தற்கு = எனவே பெயரைப் பெறுதற்கு என்றபடி.

2. ஒன்றும்--பொருந்தும் என்றபடி.