| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 337 |
நின்னுண்கண் ணுரைக்க லுறுவதொன்றுண்டு” (குறள். 1271) எனவும், “பேதை நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு” (1274) எனவும் வருவனவெல்லாம் தலைவியின் நகுநய மறைப்பைக் குறிப்பனவாம். இனி, நாணிறந்து பெருகுங் காதலால் உருகுந் தலைவி தன்நிறை யழிவு பிறரறியாவாறு மறைக்கு முயற்சி, “சிதைவுபிறர்க்கின்மை” எனப்பட்டது. “மறைப்பேன்மற்காமத்தையானோ” (குறள். 1253) எனப் பெண்ணியல்பு கூறும் குறள் இம்மெய்ப்பாடு குறிப்பதாகும். மேற்செய்யுளில் “நன்னுதுல் அரிவை தன் மனஞ்சிதைந்ததை” நீயறிந்திலையால் நெஞ்சே யானறிந்தேனது வாயாகுதலே” என வருவதுமதுவே. அதில் நன்னுதல் அரிவை தன் மனஞ் சிதைந்ததை மறைப்பதனால் “நீயறிந்திலையால்” எனவும், அவ்வாறு அவள் “கரப்பினும் கையிகந்தொல்லா (அவள்) உண்கண் உரைக்கலுறும்” குறிப்பால் தலைவன் அறிந்து அவள்பால் காதலுண்மையைத் தன் தளரு நெஞ்சொடு கிளந்து தேறுவனாதலின் “யானறிந்தேனது வாயாகுதலே” எனவும் கூறிய குறிப்பறிக. சீவகனைத் தத்தை முதலில் கண்டபோது, “. . . . நிறையெனுஞ் சிறையைக் கைபோய் இட்டநாண் வேலியுந்திக் கடலென வெழுந்த வேட்கை விட்டெரி கொளுவ நின்றாள் எரியுறும் மெழுகின் நின்றாள். ” (சீவக. 710) எனினும், அவ்வாறு அழியுந்தன் சிதைவு பிறரறியாது அடக்கும் விருப்பால், “பூங்குழல் மகளிர் முன்னர்ப் புலம்பல் நீநெஞ்சே” (சீவக. 712) என்று நெஞ்சொடு கூறித் தன்தளர்வு மறைக்கின்ற செவ்விகூறும் சிந்தாமணிச் செய்யுளடிகளாலுமிதையறிக. இனி, தலைக்காதலின் முதற்கூறாகும் இந்நான்கு, மெய்ப்பாடுகளையும் ஆரியர்நூல் கூறும் பத்தவத்தைகளுள் முதலதாக் கொள்ளும் உரையாசிரியர் கருத்துப் பொருந்தாமை, பேராசிரியர் இச்சூத்திரத்தின் கீழ் அதனை மறுப்பதாலறிக. இரண்டாமடி ஈற்றில் ‘ஒடு’ பிரிந்து சென்றொன்றும் எண்ணிடைச்சொல்; மற்றைய மூன்றொடும் தனித் தனிக்கூடி |