பக்கம் எண் :


113


மாரீற்று எதிர்மறைவியங்கோள். அல் : எதிர்மறை யுணர்த்தியது. மேற்பட்டை சீவியதன்வழியாலே நீர்வடிந்து சந்தனமரம் படுவது போலப் புணர்ச்சி நசையின்வழியாலே என்னறிவும் உள்ளமும் அங்கே செல்ல உடம்பு இறக்குந் தன்மையையுடையதென உவமையோடு பொருளைப் பொருத்திக் காண்க. இஃது அழிவில் கூட்டத்துக் காதல் கைம்மிகல்.

    ஆற்றாமை மிகுதியால் இருகால் விளித்தாள். நோய்முற்றி இறந்துபடுந்தன்மை வந்துற்றதெனக் கொண்டுவரினு நோய் மருந்தல்ல ரென்றாள். சுற்றத்தார் கண்டுவைத்துப் பழியேற்றாதபடி இறப்பதே நலனெனக் கொண்டு எமர் காணாதொழிக வென்றாள். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

     (பெரு - ரை.) "களவுங் கற்பும் அலர்வரை வின்றே" (தொல்-கற்- 21) என்பது பற்றித் தலைவி கற்புக் காலத்தும் எமர் காணன் மார் என அலரஞ்சுவா ளாயினள்: அலரிற் றோன்றும் காமத்து மிகுதி (தொல்-கற்- 22) என்பதனால். இதனாற் றலைவியின் காமஞ் சிறத்தலறிக.

(64)
  
     திணை : குறிஞ்சி.

     துறை : இது, விரிச்சிபெற்றுப் புகன்ற தோழி, தலைமகட்குச் சொல்லியது.

     (து - ம்.) என்பது, தலைவன் குறித்த பருவத்து வாராமையால் வருந்திய தலைவியைத் தோழி, "யானுங் கவலுகையில் நம் அயலகத்துமாது தான் வேறொருத்தியிடம் உரையாடும்பொழுது 'அவன் இப்பொழுதே வருகுவன்' என வாய்ச்சொற் கூறினளாதலின் அவள் அமிழ்த முண்பாளாக," வெனத் தான்பெற்ற நன்னிமித்தங் கூறித் தேற்றா நிற்பது.

     (இ - ம்.) இதனை, "பெறற்கரும் பெரும்பொருள்" (தொல்-கற்- 9.) என்னும் நூற்பாவினுள் "பிறவும் வகைபடவந்த கிளவியெல்லாம்" என்பதன்கண் அமைத்துக் கொள்க.

    
அமுதம் உண்கநம் அயலில் ஆட்டி 
    
கிடங்கில் அன்ன விட்டுக்கரைக் கான்யாற்றுக் 
    
கலங்கும் பாசி நீரலைக் கலாவ 
    
ஒளிறுவெள் அருவி 1 யொண்டுறை மடுத்துப் 
5
புலியொடு பொருத புண்கூர் யானை 
    
நற்கோடு நயந்த அன்பில் கானவர் 
    
விற்சுழிப் பட்ட நாமப் பூசல் 
    
உருமிடைக் கடியிடி கரையும் 
    
பெருமலை நாடனை வரூஉம்என் றோளே, 
  
 (பாடம்) 1. 
உண்டுறை.