பக்கம் எண் :


137


வருகின்றானெனக் கொண்டு வரைவு மலிந்ததாயிற்று.

    இறைச்சிகள்:- (1.) இருங்கழியின் நெய்தல்மலர் நிறைய நுண்ணிய தாதைப் புன்னை பரப்பாநிற்கு மென்றது, சேரியிடத்து நமர் கையேற்ப நிரம்பிய பொற்குவியலைச் சேர்ப்பன் நம்மை வரைதற் பொருட்டுக் கொடாநிற்கு மென்றதாம்.

    இறைச்சிகள் (2) தாழம்பூவின் மணம் கானலெங்கும் கமழுமென்றது நின்வரைவு நாடெங்கும் மாட்சிமைப்படு மென்றதாம். மெய்ப்பாடு - உவகை. பயன் - மகிழ்தல்.

    (பெரு - ரை.) படர் வந்து நலியும் மாலை சுடர்செல்மாலை எனத் தனித்தனி கூட்டுக. புன்னை தூவும் என்றும், வீழ்தாழ் தாழை என்றும் பாடவேற்றுமையுண்டு.

(78)
  
    திணை : பாலை.

    துறை : இது, பிரிவுணர்ந்து வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

    (து - ம்.) என்பது, தலைவன் வினைவயிற் பிரிவதறிந்து உடம்பு வேறுபட்ட தலைவி தோழியைநோக்கி நாம் தலைவர்பாற்சென்று பிரியா திருக்கும்படி கூறி நமது காமத்தன்மையையுஞ் சொல்லுகிற்போம். அவர் பிரியின் யானிறந்துபடுவது திண்ணமாதலின் அங்ஙனஞ் சொல்லி அவர் செலவை மாற்றுவதன்றி வேறெவ்வகைச் சூழ்ச்சியாலே தடுப்பதென வருந்திக் கூறாநிற்பது.

    (இ - ம்.)இதனை, "அவனறிவு ஆற்ற அறியும்" (தொல்-கற்- (9.) ) என்னும் நூற்பாவின்கண் "ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்" என்பதன்கண் அமைத்துக் கொள்க.

    
சிறைநாள் ஈங்கை உறைநனி திரள்வீ 
    
கூரை நன்மனைக் குறுந்தொடி மகளிர் 
    
மணலாடு கழங்கின் அறைமிசைத் தாஅம் 
    
ஏர்தரல் உற்ற இயக்கருங் கவலைப் 
5
பிரிந்தோர் வந்துநப் புணரப் புணர்ந்தோர் 
    
பிரிதல் சூழ்தலின் அரியதும் உண்டோ 
    
என்றுநாங் கூறிக் காமஞ் செப்புதுஞ் 
    
செப்பாது விடினே உயிரொடும் வந்தன்று 
    
அம்ம வாழி தோழி 
10
யாதனின் தவிர்க்குவங் காதலர் செலவே. 

    (சொ - ள்.) தோழி வாழி அம்ம - தோழீ வாழி ! இதனைக் கேட்பாயாக !; ஈங்கை சிறை உறை நனிதிரள் நாள்வீ - ஈங்கையின்