பக்கம் எண் :


140


அவளளித்தநோயாதலின் அதற்கு அவளே மருந்தென்றான்; "பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை, தன் நோய்க்குத் தானே மருந்து" என்றார் (1102) குறளினும். நோன்பின் பயன் கருதித் தைத்திங்க ளாடுபவளாதலின் யான் தழையுந்தாருங் கொடுத்த உதவி மறப்பவளல்லள்; உடன்படு மென்றவாறு நோன்பின் பயனெய்தத், தைத்திங்கட் பிறப்பி னீராடுதலும் தைத்திங்கள் முழுவதும் வைகறையினீராடுதலுமாம்; இதனை, "தையினீராடிய தவந்தலைப் படுவாயோ" எனக் (59.) கலியிற் கூறுமாற்றானுமறிக. வைகறையிற் புலஞ்சென்று மேய்ந்துவந்த எருமை நிரம்பப் பால் கறத்தலியல்பு.

    இறைச்சி :- குறுமாக்கள் தலைவியாகவும், எருமையின்பால் மிகுதியாகக் கறக்க விரும்புதல் நோன்பின் பயனை மிக விரும்புதலாகவும் - அவற்றை ஊர்ந்து செல்லுதல் தைத்திங்கள் விடியலி னீராடச்செல்லுதலாகவும் அதற்கேற்றவாறு கொள்க: மெய்ப்பாடு - தன்கட்டோன்றிய வருத்தம் பற்றிய இளிவரல். பயன் - ஆற்றாதுரைத்தல். இது மருதத்துக்களவு.

    (பெரு - ரை.) தடைஇ - தடையுண்டு எனினுமாம். யான் உற்ற நோய்க்கு மருந்து பெருந்தோட் குறுமகள்; அவளல்லது மருந்து பிறிது இல்லை என மருந்து என்பதை ஈரிடத்தும் கூட்டுக.

(80)
  
    திணை : முல்லை.

    துறை : இது வினை முற்றிய தலைவன் தேர்ப்பாகற் குரைத்தது.

    (து - ம்,) என்பது, சென்று வினைமுடித்த தலைவன் தேர்ப்பாகனை நோக்கி நம் அரசன் பகையைத் தணித்துவிட்டனனாதலால், நீ தேரைப் பூட்டிச் செலுத்துவாயாக; வருந்தியுறையும் நம் காதலி நம்மை நோக்கி விருந்தயர் விருப்பாலாகிய இன்னகையைக் காண்பேமென்று உவந்து கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, "பேரிசை யூர்திப் பாகர் பாங்கினும்" (தொல்-கற்-5) என்னும் விதி கொள்க.

    
இருநிலங் குறையக் கொட்டிப் பரிந்தின்று 
    
ஆதி போகிய அசைவில் நோன்தாள் 
    
மன்னர் மதிக்கும் மாண்வினைப் புரவி 
    
கொய்ம்மயிர் எருத்தின் பெய்ம்மணி ஆர்ப்பப் 
5
பூண்கதில் பாகநின் தேரே பூண்தாழ் 
    
ஆக வனமுலைக் கரைவலம் தெறிப்ப 
    
அழுதனள் உறையும் அம்மா அரிவை 
    
விருந்தயர் விருப்பொடு வருந்தினள் அசைஇய 
    
முறுவல் இன்னகை காண்கம் 
10
உறுபகை தணித்தனன் உரவுவாள்வேந்தே