(து - ம்,) என்பது, பாங்கற் கூட்டத்துத் தோழன் அஃது எவ்விடத்து எவ்வியற்றென்றாற்குத் 'தலைமகன் குன்றகத்தது சீறூர், அச்சீறூர்க்கண்ணுள்ளாளொரு கொடிச்சி, அவள் கூந்தல்நறுநாற்றத்தது; அத்தகையாள் கையில் என்னெஞ்சு சிக்குண்டது; அஃது அவளன்றிப் பிறரால் விடுத்தற்கரியாதுகா'ணென வருந்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை "மெய்தொட்டுப் பயிறல்" (தொல்-கள- 11) என்னும் நூற்பாவினுள் "குற்றங்காட்டிய வாயில் பெட்பினும்" என்பதன்கண் அமைத்துக்கொள்க.
(பாடம்) 1. | கோட்டம்பலவனார். |