பக்கம் எண் :


165


தாளங்கொட்டுமென்ற சொற் சிறப்பானே ஆசிரியர் கொட்டம்பலவனாரெனப் பெயர் பெற்றனர் போலும்.

    இறைச்சி :- கூத்தி நடந்த கயிற்றின்மேல் மந்தியின்பறழ் ஏறியாடக் கண்ட குறமாக்கள் தாளங்கொட்டா நிற்குமென்றது, காப்பன காத்துக் கடிவன கடிந்து மன்பதை யோம்புதலை மேற்கொண்ட என்னுள்ளத்து ஒரு கொடிச்சி சென்று தங்குவதனை யறிந்த நீ கை கொட்டி நகையாடி யழுங்கச் செய்தனை யென்றதாம். மெய்ப்பாடு - வருத்தம் பற்றிய இளிவரல். பயன் - பாங்கனிடத்துரைத்தல்.

    (பெரு - ரை.) பாடு - பக்கம். ஆடுமகள் என்றது கழைக்கூத்தியை. இரும்பொறைக் கழைக்கண் என மாறுக. என்னெஞ்சு கொடிச்சி கையகத்தது என மாறுக. 'குறுமிளைச்சீறூர்' என்றும் பாடம்.

(95)
  
    திணை : நெய்தல்.

    துறை : இது. சிறைப்புறமாகத் தோழி தலைவிக்குரைப்பாளாய் வரைவுகடாயது.

    (து - ம்,) என்பது, சிறைப்புறத்தானாகிய தலைமகன் கேட்டு வரையுமாற்றானே தோழி, தலைவியை நோக்கி 'அவர் நம்மைப் புணர்ந்த சோலை இதுவே' யென்றும். 'ஆடிக் கூந்தலைத் துவட்டின துறை உதுவே' யென்றும். 'தழையுடுப்பித்துச்சென்ற கானல் அதுவே' யென்றுங் கூறியுருகிப் பசந்தனையே, இனி எவ்வாறுய்குவாயென்று வருந்திக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை "களனும்பொழுதும் . . . . .அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல்-கள- 23) என்புழி வகை என்பதன்கட் கொள்க.

    
இதுவே, நறுவீ ஞாழல் மாமலர் தாஅய்ப் 
    
புன்னை ததைந்த வெண்மணல் ஒருசிறைப் 
    
புதுவது புணர்ந்த பொழிலே உதுவே 
    
பொம்மல் படுதிரை நம்மோடு ஆடிப் 
5
புறந்தாழ்பு இருளிய பிறங்குகுரல் ஐம்பால் 
    
துவரினர் அருளிய துறையே அதுவே 
    
1கொடுங்கழை நிவந்த நெடுங்கால் நெய்தல் 
    
அம்பகை நெறித்தழை அணிபெறத் தைஇத் 
    
தமியர் சென்ற கானல் என்றாங்கு 
10
உள்ளுதோ றுள்ளுதோ றுருகிப் 
    
பைஇப் பையப் பசந்தனை பசப்பே. 
  
 (பாடம்) 1  
கொடுங்கழி.