(து - ம்,) என்பது, இரவுக்குறி இடையீடின்றி வருகின்ற தலைமகனை நோக்கித் தோழி, காவன் மிகுதியையும், அதனாலே தலைமகள் துயிலாது வருந்துதலையும், அவளது நெஞ்சம் தலைவனை விட்டுப்பிரியாத அன்பினிலையையுங் கூறுவாளாய், "நாடனே ! நீ இரவில் வருதலைக் காட்டிலும் தூங்காத என் கண்ணுங் கொடிது. மீளாத என்னெஞ்சமுங் கொடியது காணென" வருந்தி வரைவுகடாதல் தோன்றக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . . .அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்"(தொல்-கள- 23) என்பதன்கண் அமைத்துக்கொள்க.
| எய்ம்முள் அன்ன பரூஉமயிர் எருத்தின் |
| செய்ய்ம்ம் மேவல் சிறுகட் பன்றி |
| ஓங்குமலை வியன்புனம் படீஇயர் வீங்குபொறி |