(து - ம்,) என்பது, வினைவயிற்சென்ற தலைவன் குறித்த கார்ப்பருவங்கண்டு வருந்திய தலைவியைத் தோழி, இது கார்ப்பருவமன்று, அறியாமையாலே கடனீ ரையுண்ட முகில் மழையைப் பெய்யக்கண்டு கார் காலமாமெனப் பிடவுங் கொன்றையுங் காந்தளு மலர்ந்தன; அவற்றைநோக்கி நீ மயங்காதே கொள்ளென வற்புறுத்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "பெறற்கரும் பெரும்பொருள்" (தொல்-கற்- 23) என்னும் நூற்பாவினுள் 'பிறவும் வகைபட வந்த கிளவி' என்பதன்கண் அமைத்துக் கொள்க.
| நீரற வறந்த நிரம்பா நீளிடைத் |
| துகில்விரித் தன்ன வெயிலவிர் உருப்பின் |
| அஞ்சுவரப் பனிக்கும் வெஞ்சுரம் இறந்தோர் |
| தாம்வரத் தெளித்த பருவங் காண்வர |
5 | இதுவோ என்றிசின் மடந்தை மதியின்று |
| மறந்துகடல் முகந்த கமஞ்சூல் மாமழை |
| பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல் |
| காரென்று அயர்ந்த உள்ளமொடு தேர்வில |
| 1பிடவுங் கொன்றையுங் கோடலும் |
10 | மடவ வாகலின் மலர்ந்தன பலவே. |