பக்கம் எண் :


185


    (வி - ம்.) வள்ளுகிர் - பெரிய நகம். கொடிறு - குறடு என்று வழங்குவது; இங்குப் பற்றுக்குறடென்றது ஈயம்பூசுங் குறட்டினை. அவலத்தால் மீட்டும் விளி தோன்றியது. நோய்ப்பாலேனென்றது துன்பத்துப் புலம்பல்.

    வழிபட்டதென்றது அவரருளிப்பாடிட்டுக்கொள்ள வேண்டியென்றவாறு. ஆனாத கௌவையினாலும் இறந்துபடாமையின் பெருந்தகைமை யழியவும் உயிர்வாழ்தல் மருந்துபோலுமென உள்ளுதொறும் நகுவே னென்றாள்.

    உள்ளுறை :- பிடி தலைவனாகவும், பாலை தலைவியாகவும், புலி அன்னை முதலாயினோராகவும், அத்தம் தோழியாகவுங்கொண்டு பிடி தோலைப் பொளித்துக்கொண்டது போலத் தலைவியினலத்தைத் தலைவன் பெற்றுண்டு போகலும் அந்தப் பாலையின் இலை தீர்ந்த நெற்று ஒலிப்பது போல நெஞ்சழிந்த தலைவி புலம்ப அருகிருந்த தோழி புலி வழங்குதல் போல அன்னை முதலானோர் இடையே இயங்கப் பெறுதலாலே, தலைவியைத் தேற்றவுமியலா திருந்தனளெனக் கொள்க. மெய்ப்பாடு - அழுகை பற்றிய நகை; பயன் - அயாவுயிர்த்தல்.

    (பெரு - ரை.) இதனை உரையாசிரியர் களவொழுக்கத்தினிடையே வரைதற்குப் பொருளீட்டப் பிரிந்த தலைவனைக் கருதி மெலிந்த தலைவி கூற்றாகக் கருதுகின்றார். இப்பிரிவு கற்புக் காலத்தது என்று கோடலே சிறப்பாகும். அலர் களவு கற்பு என்னும் இரண்டிற்கும் பொதுவாகும் என்க.

(107)
  
    திணை : குறிஞ்சி.

    துறை : இது, வரையாது நெடுங்காலம் வந்தொழுகலாற்றாளாய தோழி தலைமகளது ஆற்றாமைகூறி வரைவுகடாயது.

    (து - ம்,) என்பது, தலைவன் களவொழுக்கத்து நீட்டித்தலாலே, அதுபொறாத தோழி களவில் அருகிவருதலை யொழித்து வரைந்து கொள்ளுமாறு குறிப்பாற் கூறுகின்றாள்; பசப்பூரப்பெற்றுத் தலைவி வருந்த அவளை நீ யாதனாலோ கைவிட்டொழித்தனை, அதற்கு யான் நோகின்றேனென வருந்திக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதியின்கண் அமைத்துக் கொள்க.

    
மலையயற் கலித்த மையார் ஏனல் 
    
துணையின் தீர்ந்த கடுங்கண் யானை 
    
அணையக் கண்ட அங்குடிக் குறவர் 
    
கணையர் கிணையர் கைபுனை கவணர் 
5
விளியர் புறக்குடி யார்க்கும் நாட