பக்கம் எண் :


194


    (பெரு - ரை.) கார்ப்பருவத்தே மீண்டு வருவல் என்று கூறிப் பிரிதல் களவிற் கேலாமையின் இதற்குக் கைகோள் கற்பு என்றே கொள்க; இரண்டற்கும் பொதுவெனல் பொருந்தாமை யுணர்க.

    இனி, களிறட்டு உரும்பில் உள்ளத்து அரிமா வழங்கும் நாடன் என்றது குறிப்பானே அவன் போர் கருதிப் பிரிந்து சென்றமையையும் போரின்கண் தன் பகைவரை யெல்லாம் கொன்று வெற்றி வீறுடன் மீண்டு வருவன் காண் என்பதும் தோற்றுவித்தமை யுணர்க. அழுந்துபட - ஆழ்ந்துபட என்பதன் விகாரம்; நீருள் ஆழ்ந்து மறைய என்பது பொருள் என்க.

(112)
  
    திணை : பாலை.

    துறை : இஃது, இடைச்சுரத்து ஆற்றானாய தலைவன் சொல்லியது.

    (து - ம்,) என்பது, பொருள்வயிற்சென்ற தலைவன், இடைச்சுரத்து ஆற்றானாகித் தலைவியின் உருவெளித்தோற்றம் நோக்கி "முன்பு நான் விடைபெறும் பொழுது கூந்தலை விரித்து அதனுண்மறைந்து அழிந்தேங்கித் துன்புற்று நின்ற நம் காதலியின் வருந்திய நோக்கம் இப்பெருங்காட்டினைக் கடந்தும் என்னெதிரி லெய்த வந்தனவே இஃதென்னே"யென்று அழுங்கிக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு "மீட்டுவரவு ஆய்ந்த வகையின் கண்ணும்" (தொல். கற். 5) என்னும் விதிகொள்க.

    
உழையணந்து உண்ட இறைவாங்கு உயர்சினைப் 
    
புல்லரை இரத்திப் பொதிப்புறப் பசுங்காய் 
    
கல்சேர் சிறுநெறி மல்கத் தாஅம் 
    
பெருங்காடு இறந்தும் எய்தவந் தனவால் 
5
அருஞ்செயல் பொருட்பிணி முன்னி யாமே 
    
சேறும் மடந்தை என்றலின் தான்தன்  
    
நெய்தல் உண்கண் பைதல் கூரப் 
    
பின்னிருங் கூந்தல் மறையினள் பெரிதழிந்து  
    
உதியன் மண்டிய ஒலிதலை ஞாட்பின் 
10
இம்மென் பெருங்களத்து இயவர் ஊதும் 
    
ஆம்பலங் குழலின் ஏங்கிக் 
    
கலங்கஞர் உறுவோள் புலம்புகொள் நோக்கே. 

    (சொ - ள்.) மடந்தை அருஞ் செயல் பொருள் பிணி முன்னி யாம் சேறும் என்றலின் - மடந்தாய்! எம்முள்ளம் அருமையாக ஈட்டப்படும் பொருளவாவினாலே பிணிக்கப்பட்டதை எண்ணியாஞ் செல்லுகின்றோம் என்றவுடன்; தான்