(து - ம்,) என்பது, வினைவயிற் சென்ற காதலன் குறித்த பருவத்து வாராமையால் அதனை ஆற்றாத தலைவி, இவ் விளவேனிற்காலத்தை நோக்குந்தோறும் 'தலைவர் நம்மை மறந்தாரென நாம் வருந்துவதன்றி மெல்லிய பாதிரிமலர் விற்பவளை நோக்கியும் என்னெஞ்சு வருந்துகின்றதாதலின், யான் எங்ஙனம் ஆற்றுவே' னென் றழிந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை "ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்" (தொல். கற். 20) என்பதனகண் அமைத்துக் கொள்க.
| அடைகரை மாஅத்து அல்குசினை ஒலியத் |
| தளிர்கவின் எய்திய தண்ணறும் பொதும்பின் |
| சேவலொடு கெழீஇய செங்கண் இருங்குயில் |
| புகன்றெதிர் ஆலும் பூமலி காலையும் |
5 | அகன்றோர் மன்றநம் மறந்திசி னோரென |
| இணருறுபு உடைவதன் தலையும் புணர்வினை |
| ஓவ மாக்கள் ஒள்ளரக்கு ஊட்டிய |
| துகிலிகை அன்ன துய்த்தலைப் பாதிரி |