பக்கம் எண் :


203


ஊரிலுள்ளார் கூறுவர், யான் எய்திய நோயை வேறொன்றன் மேலிட்டு் அங்ஙனம் பழி பிறிதொன்றாக அயலார் கூறுதல் பண்புடையதன்றாதலின்; பல் நாள் வாழலேன் - இனி யான் நெடுநாள்காறும் உயிரேடு வாழ்ந்திரேன் காண் ! எ - று.

    (வி - ம்.) மலிர்தல் - நிறைதல். புள் - காக்கை. கட்சி - பறவைக்கூடு. ஆர்: அசைநிலை.

    புணர்ந்தார்க்கன்றி இன்பஞ் செய்யாமையாலே தனக்குத் துன்புறுத்துங் கடலை முன்னே கூறினாள். சேக்கையிலே சேவலும் பெடையும் புகுதக் காண்டலின் அங்ஙனம் யானும் ஆயினேனில்லையேயென்பாள், புள்ளுடன் கட்சிசேர வென்றாள். புல்லியுறையுமாறு வெப்பநீங்கித் தட்பஞ் செய்தற்கேதுவாயிருத்தலிற் சுடர் மழுங்கினமையுடன் கூறினாள். ஆற்றாமை மீதூர்தலின் இம்மாலையில் இனி வாழலேனென இறந்துபடுதல் கூறினாள். இவையனைத்தும் துன்பத்துப் புலம்பல். உன்னாரென்றது ஐயஞ்செய்தல். ஏனை மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

    (பெரு - ரை.) தலைவனுடைய அயன்மை தோன்றக் காதலர் என்னாது அன்னர் என்றாள். பன்னாள் வாழலேன், வாழாது யான் உயிர் நீத்துழி யான் இறந்தமைக்குரிய பிணி பிறிதாகக் கூறுவர். அங்ஙனம் பழி பிறிது ஆதல் பண்பும் அன்று என்றாள் எனினுமாம்.

(117)
  
    திணை : பாலை.

    துறை : இது, பருவங்கண் டாற்றாளாய தலைவி சொல்லியது.

    (து - ம்,) என்பது, வினைவயிற் சென்ற காதலன் குறித்த பருவத்து வாராமையால் அதனை ஆற்றாத தலைவி, இவ் விளவேனிற்காலத்தை நோக்குந்தோறும் 'தலைவர் நம்மை மறந்தாரென நாம் வருந்துவதன்றி மெல்லிய பாதிரிமலர் விற்பவளை நோக்கியும் என்னெஞ்சு வருந்துகின்றதாதலின், யான் எங்ஙனம் ஆற்றுவே' னென் றழிந்து கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை "ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்" (தொல். கற். 20) என்பதனகண் அமைத்துக் கொள்க.

    
அடைகரை மாஅத்து அல்குசினை ஒலியத் 
    
தளிர்கவின் எய்திய தண்ணறும் பொதும்பின் 
    
சேவலொடு கெழீஇய செங்கண் இருங்குயில் 
    
புகன்றெதிர் ஆலும் பூமலி காலையும் 
5
அகன்றோர் மன்றநம் மறந்திசி னோரென 
    
இணருறுபு உடைவதன் தலையும் புணர்வினை 
    
ஓவ மாக்கள் ஒள்ளரக்கு ஊட்டிய 
    
துகிலிகை அன்ன துய்த்தலைப் பாதிரி