பக்கம் எண் :


202


    (இ - ம்.)இதற்கு "வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்" (தொல். கள. 20) என்னும் விதிகொள்க.

    துறை : (2) சிறைப்புறமுமாம்.

    (து - ம்,) என்பது, தலைவன் சிறைப்புறத்தானாக அவன் கேட்டு விரைவிலே வரையும் வண்ணம் முன்னே கூறியபடி கூறாநிற்பது. (உரை இரண்டற்கும் ஒக்கும்.)

    (இ - ம்.)இதற்கும் அவ்விதியே அமையும்.

    
பெருங்கடல் முழங்கக் கானல் மலர 
    
இருங்கழி ஓதம் இல்லிறந்து மலிர 
    
வள்ளிதழ் நெய்தல் கூம்பப் புள்ளுடன் 
    
கமழ்பூம் பொதும்பர்க் கட்சி சேரச் 
5
செல்சுடர் மழுங்கச் சிவந்துவாங்கு மண்டிலம் 
    
கல்சேர்பு நண்ணிப் படரடைபு நடுங்கப் 
    
புலம்பொடு வந்த புன்கண் மாலை 
    
அன்னர் உன்னார் கழியிற் பன்னாள் 
    
வாழலேன் வாழி தோழி யென்கண் 
10
பிணிபிறிது ஆகக் கூறுவர் 
    
பழிபிறிது ஆகல் பண்புமார் அன்றே, 

    (சொ - ள்.) தோழி வாழி - தோழீ ! நீ வாழி; பெருங்கடல் முழங்கக் கானல் மலர இருங்கழி ஓதம் இல் இறந்து மலிர - பெரிய கடல் முழங்காநிற்கவும் கடல் அருகிலுள்ள சோலை ஒருங்கே மலர்தலைச் செய்யவும், கரிய கழியின் நீர்வெள்ளம் நமது மனையெல்லை கடந்து நிறைந்து வாராநிற்பவும்; வள் இதழ் நெய்தல் கூம்ப - பெரிய இதழையுடைய நெய்தல் மலர் குவியவும்; புள் உடன் கமழ் பூ பொதும்பர்க் கட்சி சேர - காக்கைகள் ஒருசேர மணம்வீசும் பூஞ்சோலையிலுள்ள தம்தம் கூடுகளிலே சென்று தங்கா நிற்பவும்; வாங்கு மண்டிலம் சிவந்து கல்சேர்பு நண்ணி செல்சுடர் மழுங்க - வளைந்த ஆதித்த மண்டிலம் சிவந்து தோன்றி அத்தமனக் குன்றைச் சென்றடைந்து எங்கும் முன்பு பரவிய சுடர் மழுக்கமடையவும்; படர் அடைபு நடுங்கப் புலம்பொடு வந்த புன்கண் மாலை - அவற்றை நோக்கித் துன்பங்கள் எல்லாம் ஒருங்கே யான் அடைந்து நடுங்கும்படி அதனையுடன் கொண்டுவந்த புன்கண் செய்யும் மாலைப்பொழுதில்; அன்னர் உன்னார் கழியின் - அத்தலைவர் தாம் என்னை நினையாராகி அகன்றொழிந்தால்; என்கண் பிணிபிறிது ஆகக் கூறுவர் பழிபிறிது ஆகல் பண்பும் அன்று - அதனா லென்பாலுண்டாய காமநோயாலாய வேறுபாடு முருகு அணங்கியதால் வந்ததாகுமென்று