பக்கம் எண் :


201


கோள் - காய். ஏ - பெருமை. கேண்மை பழம் வீழ்ந்துக்காங்குச் சென்றுக்கன்று எனக் கூட்டுக. முகை - துறுகல்: மரமிகுதியால் இருளடர்ந்த முகையென்றவாறு. கேண்மை பலவின்கனியாகவும், அக்கேண்மை தனக்குப் பயன்படாமை கனி அளையிலே விழுந்தழிந்தாற் போல்வதாகவும் உவமையோடு பொருத்திக்கொள்க; இது, சிறப்பு நிலைக்களமாகச் சினையோடு சினை வந்த பயவுவமம்.

    தீங்கு செய்தாரையும் பொறுக்கிற்பவர் நம்மைத் துறத்தலின் நாம் அரியேமாகியது பற்றித் தாமும் அரியராயினார் போலுமெனத் தன் வயினுரிமையும் அவன்வயிற் பரத்தைமையுங் கூறினாள். அவர் ஓவார் என்றது துன்பத்துப் புலம்பல்.

    உள்ளுறை :- சூன்முற்றிய பிடியானை, மூங்கிலின் முளையைத் தின்றால் அதன் கொடுமையால் தனது சூல் பிண்டமாகி விழுந்தொழியுமென்பதை யறியாமல் அம்முளையைத் தின்று பின்பு தன் சூல் வழுவுதலால் வருந்துவதுபோல, நாண் முதலியவற்றால் மேம்பட்ட யான் இங்ஙனந் தொடர்பறுங் கேள்வனை நயந்தால் பின்பு ஏதிலாரெடுக்கும் அலர்காரணமாக நமது பண்புமுதலாயின அழியு மென்பதனை யறியாமல், உடன்பட்டு இப்பொழுது அலரா லெல்லா மிழந்தே னென்றதாம். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

    (பெரு - ரை.) வேற்றலைக் கொழுமுளை என்றும் பாடம். இதுவே சிறந்த பாடமாகும். வேல்போலும் கூரிய தலையையுடையமுளை என்க. சூன்முதிர் மடப்பிணை என்பதும் பாடம். இனி, பெரியோர் "பிறர் தீமை சொல்லா நலத்தது சால்பு" என்னும் சீரிய கொள்கையுடையராகலின் தீமை செய்தலைக் கண்கூடாகக் காணப்பட்டோர் திறத்தும் அவரே அத்தீமையை அறிந்து உணர்ந்து திருந்துக என்று வாளாவிருப்பர். அங்ஙன மின்றி, இவ்வூர்ப் பெண்டிர் தீமையில்லாத என் திறத்து அலர் ஒழிந்திலர் என்பது கருத்தாகக்கொள்க.

    நாப்பண் ஏமுற்று என்பது இடையிலே கெட்டு என்றவாறு. நாப்பண் என்பதற்கு வயிறு என்று உரையாசிரியர் கொண்டனர். பிண்டம் நாப்பண் ஏமுற்றுவழுவ என மாறுக. இடை என்றது, கருப்பம் முதிர்ந்து பிறத்தற்கு இடையிலே என்றவாறு.

(116)
  
    திணை : நெய்தல்.

    துறை :(1) இது, வரைவுநீட ஆற்றாளாய தலைவி வன்பொறை யெதிரழிந்து சொல்லியது.

    (து - ம்,) என்பது, தலைமகன் மணஞ்செய்துகொள்ள நீட்டித்தலாலே தலைமகள் வருந்துவதை அறிந்த தோழி அவர் விரைவில் வருவராதலின், அதுகாறும் நீ வருந்தாதே யென்றலும் அவள், பொறாளாகி 'இவ்வண்ணமாய் வருகின்ற மாலைப்பொழுதையும் கருதாதுநீங்கினராதலின், அதனால் யான் அடைந்தநோய் முருகணங்கியதால் வந்ததென ஊரார் கூறுவர;் அவ்வலர்மொழியை எய்தியும் வாழ்தல் பண்பன்றாதலின் யான் உயிர் வாழலே'னென் றழிந்து கூறாநிற்பது.