| தீமை கண்டோர் திறத்தும் பெரியோர் |
| தாமறிந்து உணர்க என்ப மாதோ |
| வழுவப் பிண்டம் நாப்பண் ஏமுற்று |
| இருவெதிர் ஈன்ற ஏற்றிலைக் கொழுமுளை |
5 | சூன்முதிர் மடப்பிடி நாண்மேயல் ஆரும் |
| மலைகெழு நாடன் கேண்மை பலவின் |
| மாச்சினை துறந்த கோள்முதிர் பெரும்பழம் |
| விடரளை வீழ்ந்துக் காங்குத் தொடர்பறச் |
| சேணுஞ் சென்றுக் கன்றே அறியாது |
10 | ஏகல் அடுக்கத்து இருண்முகை யிருந்த |
| குறிஞ்சி நல்லூர்ப் பெண்டிர் |
| இன்னும் ஓவார் என்திறத்து அலரே. |