(து - ம்,) என்பது, தலைவன் மணஞ்செய்துகொள்ளாது நீட்டித்ததனாலே தலைவியது ஆற்றாமையறிந்து அவர் வந்தெய்துவராதலின் நீ வருந்தாதே வலிந்து பொறுத்திருவென்ற தோழியை நோக்கி, 'அவள் நம் காதலன் நம்பால் வைத்த நட்பானது தொடர்பின்றி அறவொழிந்தபின்னும் அயன்மாதர் என்னை அலர் கூறுவ தொழிந்தாரிலர்; அதனை யெங்ஙன மாற்றுவே" னென்று எதிரழிந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "அருமை செய்து அயர்ப்பினும்" (தொல். கள. 20) என்னும் விதிகொள்க.