பக்கம் எண் :


221


128. நற்சேந்தனார
     திணை : குறிஞ்சி.

     துறை : (1) இது, குறைநேர்ந்த தோழி தலைவி குறைநயப்பக் கூறியது.

     (து - ம்.) என்பது, பாங்கியிற் கூட்டத்தின்கண்ணே தலைமகனது குறைதீர்க்க உடன்பட்ட தோழி தலைமகளை நோக்கி, "நின்மேனி வாடவும், நெற்றியினொளி கரப்பவும் எனக்கு உரைத்தாயல்லை, நான் அவற்றின் காரணத்தை யறிவேன்" என்று கூறி என்மீது தவறேற்றி வருந்தாதே கொள்: தினைப்புனத்தில் ஒரு தோன்றல்வந்து என் முதுகை யணைத்துக் கொண்டனன், அதனை நினைந்து இங்ஙனமாயிற்றென்று, தான் கூறுவதனாலே தலைவி ஆராய்ந்து தலைவனது குறையைக் கூறவந்தாள்' என்றறியும்படி கூறாநிற்பது,

     (இ - ம்.) இதற்கு, "மறைந்தவள் அருகத் தன்னொடும் அவளொடும் முதன்மூன்று அளைஇப் பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கினும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.

     துறை : : (2) தோழிக்குத் தலைவி அறத்தொடு நின்றதூஉமாம்.

     (து - ம்.) என்பது தலைவி இக் களவொழுக்கத்தினைத் தமர்க்கு அறிவுறுத்தி வேற்றுவரைவுக் குடன்படாதபடி செய்யவேண்டுங் கருத்தினளாகி அதனைத் தன் தோழியிடத்துக் கூறிப் புலப்படுத்தச் செய்ததூஉமாகும்.

     (இ - ம்.) இதற்கு, "விட்டுயிர்த்து அழுங்கினும்" (தொல். கள. 20) என்னும் விதி கொள்க.

    
பகலெரி சுடரின் மேனி சாயவும்  
    
பாம்பூர் மதியின் நுதலொளி கரப்பவும்  
    
எனக்குநீ உரையா யாயினை நினக்கியான்  
    
உயிர்பகுத் தன்ன மாண்பினேன் ஆகலின்  
5
அதுகண் டிசினால் யானே என்றுநனி  
    
அழுதல் ஆன்றிசின் ஆயிழை ஒலிகுரல்  
    
ஏனல் காதலின் இடையுற் றொருவன்  
    
கண்ணியன் கழலன் தாரன் தண்ணெனச்  
    
சிறுபுறங் கவையினன் ஆக அதற்கொண்டு  
10
அஃதே நினைந்த நெஞ்சமொடு  
    
இஃதா கின்றியான் உற்ற நோயே.  

     (சொ - ள்.) ஆயிழை பகல் எரி சுடரின் மேனி சாயவும் பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும் நீ எனக்கு உரையாய் ஆயினை -ஆயிழாய்! பகற் பொழுதில் எரிகின்ற விளக்கு ஒளி மழுங்கிக் காட்டுதல் போல நின் மேனி வாடவும், இராகுவினாலே கவர்ந்து