பக்கம் எண் :


223


வருந்துகின்றே னென்றவாறு, மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - அறத்தொடு நிற்றல்.

     (பெரு - ரை.) இதன்கண் தோழி "ஏனல் காவலின் இடையுற்று ஒருவன் தண்ணெனச் சிறுபுறங் கவையினன்" என்றது படைத்து மொழிந்தது. இங்ஙனம் கூறுதல் வழுவாயினும், பொருட்பயம்பட வந்தமையின் அமைவதாயிற்று. இதனை,

  
"அறக்கழி வுடையன பொருட்பயம் படவரின் 
  
 வழக்கென வழங்கலும் பழித்தன் றென்ப"     (தொல். பொருளியல். 24) 
(128)

என்னும் நூற்பாவா னுணர்க.

  
     திணை : குறிஞ்சி.

     துறை: இது, பிரிவுணர்த்தப்பட்ட தோழி, தலைமகளை முகம்புக்கது.

     (து - ம்.) என்பது, தலைவனாலே பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைவியை நெருங்கிப் 'பெரிதும் நகைத்தற்காகிய செயலொன்றனை நீ கேள்; காதலர் நம்மை இங்கே கைவிட்டுத் தமியராய் வினைவயிற் செல்வாரெனவும், அவர் மீண்டுவருமளவும் நாம் மனையின்கண்ணே வருந்தியிருக்க வேண்டு'மெனவுங் கூறாநிற்பரென்று தலைவியினுள்ளம் தன்பால் மீண்டு இவளது முகத்தை நோக்கிக் கேட்கும் வண்ணங் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, "பிறவும் வகைபட வந்த கிளவி" (தொல். கற். 9) என்பதன்கண் அமைத்துக் கொள்க.

    
பெருநகை கேளாய் தோழி காதலர்  
    
ஒருநாள் கழியினும் உயிர்வேறு படூஉம்  
    
பொம்மல் ஓதி நம்மிவண் ஒழியச்  
    
செல்ப என்ப தாமே சென்று  
5
தம்வினை முற்றி வரூஉம்வரை நம்மனை  
    
வாழ்தும் என்ப நாமே அதன்தலைக் 
    
கேழ்கிளர் உத்தி அரவுத்தலை பனிப்பப்  
    
படுமழை உருமின் உரற்றுகுரல்  
    
நடுநாள் யாமத்துந் தமியங் கேட்டே.  

    (சொ - ள்.) தோழி காதலர் ஒருநாள் கழியினும் உயிர்வேறு படூஉம் பொம்மல் ஓதி - தோழீ! காதலர் ஒரு நாள் நின்னைப் பிரியினும் நின் உயிரின் தன்மை வேறுபடுகின்ற பொலிவுற்ற கூந்தலையுடையாய் ! பெரு நகை கேளாய் - யாவரும்