பக்கம் எண் :


236


பல வாழிய - ஆதலின் அவன் நெடுநாள்காறும் வாழ்வானாக; எ - று.

    (வி - ம்.) ஐ - தலைவன். என் ஐ - என் தந்தை. தலைப்பிரிவு - விட்டுப்பிரிவு. அறவோன் - மருத்துவன். சிறிய தலைப்பிரிவென்பதை நேராகக் கொண்டு சிலகாலம் விட்டுப் பிரிந்ததை என்றலுமாம்.

    பிரிதலாலே தோற்மெலிந்தும், வளைமறைத்தலால் அலர்தூற்றும் நொதுமலாட்டியர்க்குப் புலனாயிற்றில்லையென்றதாம். இஃது உடம்பு நனிசுருங்கல். மெய்ப்பாடு - அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன் - வரைவுடன்படுத்தல்.

    (பெரு - ரை.) தலைப்பிரிவு உண்மை அறிவான்போல - பிரிவு உளதாதலை அறிவான் போல எனலே அமையும்; இனி நீப்ப நீங்காது வரின் வரை அமைந்து என்பதற்கு நந்தலைவர் நம்மை நீத்துழிக் கழன்று வீழந்துவிடாமலும் அவர் நம்மைத் தலைப்பட்டுழி கைக்கு அளவாக அமைந்தும் என்று பொருள் கோடலே நேரிது. எனவே உடல்மெலியும்பொழுது கழன்று வீழ்ந்தொழியாமலும் உடல்பூரிக்கும்பொழுது போதாதாகி விடாமலும் இடைநிகர்த்த அளவுடையதாய்ச் செய்து செறீஇயினன் என்பது கருத்தென்க.

(136)
  
137. பெருங்கண்ணனார்
    திணை : பாலை.

    துறை : இது, தலைவன் செலவழுங்கியது.

    (து - ம்,) என்பது, வினைவயிற்செல்லுந் தலைமகன் தன் நெஞ்சை நோக்கிச் 'சுரத்திற்செல்லக் கருதிய நீ நம் காதலியைக் கைவிடக் கருதினை போலும்; அங்ஙனமாயின் இவளினுங்காட்டில் அரியதொன்றனையடைந்தனை மன்'னென வருந்தி இகழ்ந்து கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு "வேற்றுநாட் டகல்வயின் விழுமத் தானும்" (தொல். கற். 5) என்னும் விதிகொள்க.

    
தண்ணிய கமழுந் தாழிருங் கூந்தல் 
    
தடமென் பணைத்தோள் மடநல் லோள்வயின் 
    
பிரியச் சூழ்ந்தனை ஆயின் அரியதொன்று  
    
எய்தினை வாழிய நெஞ்சே செவ்வரை 
5
அருவி ஆன்ற நீரில் நீளிடைக் 
    
கயந்தலை மடப்பிடி உயங்குபசி களைஇயர் 
    
பெருங்களிறு தொலைத்த முடத்தாள் ஓமை 
    
அருஞ்சுரஞ் செல்வோர்க்கு அல்குநிழல் ஆகும் 
    
குன்ற வைப்பின் கானம் 
10
சென்றுசேண் அகறல் வல்லிய நீயே.