(து - ம்,) என்பது, தலைமகன் பிரிந்தமையால் வேறுபட்டுக் காட்டிய தலைவியின் மெய்யை நோக்கி ஊரார் அலர்தூற்றுதலும் அதனை ஆற்றாளாயினாளைத் தோழி சிறைப்புறமாகக் கேட்டுநின்ற தலைவனுக்கு அறிவுறுத்துமாற்றானே 'முன்பு தலைவன் நினக்கு மாலை சூட்ட அதனைக் கண்ணாலே கண்டதல்லது இவ்வூரறிந்தது பிறிதொன்றன்று: அதற்கு நீ ஆற்றாதவாறு என்னை"யெனக் கவன்று கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதியின் பாற்படுத்துக.
| உவர்விளை உப்பின் குன்றுபோல் குப்பை |
| மலையுய்த்துப் பகரும் நிலையா வாழ்க்கைக் |
| கணங்கொள் உமணர் உயங்குவயின் ஒழித்த |
| பண்ணழி பழம்பார் வெண்குருகு ஈனும் |
5 | தண்ணந் துறைவன் முன்னாள் நம்மொடு |
| பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல் |
| பூவுடன் நெறிதரு தொடலை தைஇக் |
| கண்ணறிவு உடைமை அல்லது நுண்வினை |
| இழையணி அல்குல் விழவாடு மகளிர் |
10 | முழங்குதிரை இன்சீர் தூங்கும் |
| அழுங்கல் மூதூர் அறிந்தன்றோ இன்றே. |
(சொ - ள்.) உவர்விளை உப்பின் குன்றுபோல் குப்பை மலை உய்த்துப் பகரும் - உவர் நிலத்து விளைகின்ற குன்றுபோலும் உப்பின் குவியலை மலைநாட்டகத்தே கொண்டுபோய் விலைகூறி விற்கின்ற; நிலையா வாழ்க்கைக் கணம் கொள் உமணர் - ஓரிடத்திலும் நிலைத்தலில்லாத வாழ்வினையுடைய கூட்டங்கொண்ட உப்பு வாணிகர்; உயங்குவயின் ஒழித்த பண் அழி பழம்பார் வெள் குருகு