பக்கம் எண் :


243


தோழிமார் மகிழ இடையே செல்லுதலாலே பரிவிலள்போல் ஆயினாளன்றி வேறில்லையாதலின் இனி அருளுதலையுஞ் செய்யுமென்பது கொண்டு பின்னிலை முனியாதே என்றான். அவளால் வந்த நோயாதலின் அந்த நோயின்மருந்து அவளே என்றான். "பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை, தன்னோய்க்குத் தானே மருந்து" (குறள் - 1102) என்றதனானும் அறிக. மெய்ப்பாடு - பிறன்கண் தோன்றிய வருத்தம்பற்றிய இளிவரல். பயன் - தானே புலம்பி ஆறுதல்.

    (பெரு - ரை.) கொண்டல் - கீழ்காற்று. கீழ்காற்றாற் கொண்டு வரப்படும் பெரிய மழை எனப் பொருள் கோடல் சிறப்பு. குடக்கு ஏர்பு என்பதற்கு மேற்றிசையிலே எழுச்சியுற்று எனல் அமையும். மேம்பாலுள்ள மலையிலே எழுந்து எனல் வேண்டாவாம். "கொண்டன் மாமழை" (34) எனப் புறத்தினும் வருதல் காண்க. கூதிர்ப்பருவமாகலின் கொண்டல் மாமழை கூறப்பட்டது.

(140)
  
    திணை : பாலை.

    துறை : இது, பொருள்கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைவன் சொல்லிச் செலவழுங்கியது.

    (து - ம்,)என்பது, பொருள்தேடும்படி ஒருப்படுத்திய நெஞ்சினைத் தலைமகன் நோக்கி, "நினக்கு அருஞ்சுரம் மிக எளியவாயிருக்கும்; யான் இவளுடைய கூந்தலிலே துயிலுவதை யொழிய விடுகலேன்; ஆதலின் வேண்டுமாயின் நீயே சென்றுகா"ணென்று அழுங்கி்க் கூறா நிற்பது.

    (இ - ம்.) இதற்கு, "வேற்றுநாட் டகல்வயின் விழுமத் தானும்" (தொல். கற். 5) என்னும் விதிகொள்க.

    
இருஞ்செம் முடிய கொடுங்கவுள் கயவாய் 
    
மாரி யானையின் மருங்குல் தீண்டிப்  
    
பொரியாரை ஞெமிர்ந்த புழற்காய்க் கொன்றை 
    
நீடிய சடையோடு ஆடா மேனிக் 
5
குன்றுறை தவசியர் போலப் பலவுடன் 
    
என்றூழ் நீளிடைப் பொற்பத் தோன்றும் 
    
அருஞ்சுரம் எளியமன் நினக்கே பருந்துபடப் 
    
பாண்டிலொடு பொருத பல்பிணர்த் தடக்கை 
    
ஏந்துகோட்டு யானை இசைவெம் கிள்ளி 
10
வம்பணி உயர்கொடி அம்பர் சூழ்ந்த 
    
அரிசிலந் தெள்ளறல் அன்ன இவள் 
    
விரியொலி கூந்தல் விட்டமை கலனே.