பக்கம் எண் :


247


கருதினளாயினும் அவளது ஆயமும், பயிலிடமும், கிளிகூவுதலுங் கண்டு துயர் தாங்ககில்லாளாய் என்மகள் வழுவிலள், அவள் கொண்ட காமம் வியப்புடையதே, அவள்காரணமாக முன்னமே அயலார்கூறும் பழிமொழியை அறிந்திருந்தும் அறியாதேன்போல இருந்தொழிந்தேனாதலால், யானே வழுவுடையே"னென வருந்தி மனையின்கணிருந்து மருண்டு கூறாநிற்பது,

    (இ - ம்.) இதனை, "தன்னும் அவனும் அவளும்.................நற்றாய் புலம்பலும் அவ்வழி யுரிய" (தொல், அகத். 36) என்னும் விதியின்கண் அமைத்துக்கொள்க.

    
ஐதே காமம் யானே ஒய்யெனத் 
    
தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து 
    
ஓரை ஆயமும் நொச்சியுங் காண்தொறும் 
    
நீர்வார் கண்ணேன் கலுமும் என்னினும் 
5
கிள்ளையுங் கிளையெனக் கூஉம் இளையோள் 
    
வழுவிலள் அம்ம தானே குழீஇ 
    
அம்பன் மூதூர் அலர்வாய்ப் பெண்டிர் 
    
இன்னா இன்னுரை கேட்ட சின்னாள் 
    
அறியேன் போல உயிரேன் 
10
நறிய நாறுநின் கதுப்பென் றேனே. 

    (சொ - ள்.) தரு மணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து - உழையர் கொணர்ந்த மணல் பரப்பிய அழகிய மாளிகையின் முன்றிலின்கண்; ஓரை ஆயமும் நொச்சியும் காண்தொறும் - ஓரையாடுகின்ற தோழியர் கூட்டத்தையும் ஆடிடமாகிய நொச்சி வேலியையும் காணுந்தோறும்; யான் ஒய்யென நீர் வார் கண்ணேன் கலுழும் என்னினும் - யான் விரைய நீர் வடிகின்ற கண்ணையுடையேனாகி அழுகின்ற என்னினுங்காட்டில்; கிள்ளையும் கிளை எனக் கூஉம் - அவள் வளர்த்த கிளியும் "அன்னாய்! துயிலுணர்தி" எனக் கூவா நிற்கும்; இளையோள் வழுவு இலள் - இவை நிற்ப என் இளம் புதல்விதானும் குற்றமே உடையள் அல்லள்; காமம் ஐது - அவள் கொண்ட காமம் மிகவியப்புடையதாய் இராநின்றது; அம்பல் மூதூர் அலர் வாய்ப் பெண்டிர் குழீஇ இன்னா இன்உரை கேட்ட சில் நாள் - அம்பல் மிக்க இப் பழைய ஊரின்கணுள்ள அலர்தூற்றும் வாயையுடைய ஏதிலாட்டியர் பலரும் ஒருசேரக்கூடிக் கூறுகின்ற கொடிய இனிய உரைகேட்ட சில நாளளவும்; அறியேன் போல உயிரேன் - யாதொன்றனையும் அறியாதேன் போல மூச்சுவிட்டேனுமில்லேன்; நின் கதுப்பு நறிய நாறும் என்றேன் - பின்னும் மிக அலர் எழுதலாலே ஒரோவொருகால் என்மகளை நோக்கி நின் கூந்தல் பண்டைமணமின்றி