பக்கம் எண் :


250


பேதை நெஞ்சம் இரும்பிடி அரவம் கேட்டு அஞ்சிக் கவற்றுதலால் என்னிலை இவ்வண்ணம் ஆயிற்று என்றாள் என்பதே நேரிய உரையாகும். இவர் இவ்வாறு வருகின்றார் என்பதனை அவர்தோளில் ஒட்டியிருந்த விரவு மலரால் யான் இப்பொழுது கண்டுகொண்டேன் என்பாள் குட்டந்தமியர் நீந்தி விரவுமலர் பொறித்த தோளர் வருதல் என்றாள். இதனை முன்னரே அறிந்திருப்பின் யான் இரவுக்குறிக்கு இயையேன் என்பது கருத்து. அவன் இங்ஙனம் வருதலை அறியாமையான் இதற்கு வருந்தாது பிடியின் பிளிறு கேட்டு அதற்கே கவலும் என்பாள் பேதை நெஞ்சம் என்றாள். கண்தாமே அவரைக் கண்டு தாமே கலுழ்ப ஆகலின் அவை கலுழ்தல் தகும்; யாதொன்றும் செய்யாத நெஞ்சமும் கவல்கின்றது என்பாள் ஏதில் நெஞ்சம் என்றாள்.

(144)
  
    திணை : நெய்தல்.

    துறை : இஃது, இரவுக்குறிவந்த தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி வரைவுகடாயது.

    (து - ம்,) என்பது, இரவுக்குறிவந்து சிறைப்புறத்தானாகிய தலைமகன் கேட்டு அஞ்சி விரைய வரையுமாற்றானே தோழி, தலைவியை நோக்கி "அன்னை நமது களவொழுக்கத்தை யறிந்தவள்போல "அவன் யாங்குளன்", என்று கூறாநிற்பாள்; அன்றி நீ என்னாலுங் காப்பதற்குரியை; நமது சேரியின்கண்ணே இரவில் அவருடைய தேர்மணி யோசையு மொலிக்கும்; இதற்கு யாது செய்வே'னென வருந்திக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதியின்கண் அமைத்துக் கொள்க.

    
இருங்கழி பொருத ஈர வெண்மணல் 
    
மாக்கொடி அடும்பின் மாயிதழ் அலரி 
    
கூந்தன் மகளிர் கோதைக் கூட்டுங் 
    
காமர் கொண்கன் நாமவெங் கேண்மை 
5
அமைந்தே தில்லா ஊங்கு நம்மொடு 
    
புணர்ந்தனன் போல உணரக் கூறித் 
    
தான்யாங் கென்னும் அறனில் அன்னை 
    
யானெழில் அறிதலும் உரியள் நீயும்நம் 
    
பராரைப் புன்னைச் சேரி மெல்ல 
10
நள்ளென் கங்குலும் வருமரோ 
    
அம்ம வாழியவர் தேர்மணிக் குரலே. 

    (சொ - ள்.) அம்ம வாழி - தோழீ! நெடுங்காலம் வாழ்வாயாக! யான் கூறுகின்றதனைக்கேள்!; இருங்கழி பொருத ஈர்வெள்