(து - ம்,) என்பது, இரவுக்குறிவந்த தலைவன் சிறைப்புறத்தானாக ஆற்றது ஏதங்கூறி இரவுக்குறி மறுத்து வரைவுடன்படுத்த வேண்டித் தோழி, தலைவியை நோக்கி 'ஏடீ, இம் மழை முழக்கத்தும் புலி முழக்கத்தும் அயர்ந்து தூங்காநின்றனை போலும்; இவ்விரவு அவர் வாராதிருப்பின் நல்லதாகும்; மலைநெறியை நினைக்குந்தோறும் என்னெஞ்சம் அங்கே இயங்கா நின்ற' தென்று சோர்ந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "ஆற்றது தீமை அறிவுறு கலக்கமும் . . . . .அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதியின்கண் அமைத்துக்கொள்க.
| கானமுங் கம்மென் றன்றே வானமும் |
| வரைகிழிப்பு அன்ன மையிருள் பரப்பிப் |
| பல்குரல் எழிலி பாடோ வாதே |
| மஞ்சுதவழ் இறும்பில் களிறுவலம் படுத்த |
5 | வெஞ்சின உழுவைப் பேழ்வாய் ஏற்றை |
| அஞ்சுதக உரறும் ஓசை கேளாது |
| துஞ்சுதி யோஇல தூவி லாட்டி |
| பேரஞர் பொருத புகர்படு நெஞ்சம் |
| நீரடு நெருப்பில் தணிய இன்றவர் |
10 | வாரா ராயினோ நன்றே சாரல் |
| விலங்குமலை யாராறு உள்ளுதொறும் |
| நிலம்பரந்து ஒழுகும்என் நிறையில் நெஞ்சே. |
(சொ - ள்.) இல தூ இல் ஆட்டி - ஏடீ! வலியிலாதாய்!; கானமும் கம் என்றன்று - காடு கம்மென்று ஒலியடங்குவதாயிற்று; வானமும் வரை கிழிப்பு அன்ன மை இருள் பரப்பி பல் குரல் எழிலி பாடு ஓவாது - ஆகாயமும் மலைமுழைபோன்ற கரிய இருளைப் பரப்பிப் பலவாய இடிமுழக்கத்தையுடைய மேகம் முழங்குவதும் நீங்குகின்றிலது; மஞ்சு தவழ் இறும்பில் களிறு வலம்படுத்த வெஞ்சினம் பேழ்வாய் உழுவை ஏறு - மேகம் தவழும் குறுங்காட்டினிடத்திலே களிற்றை வலத்தே விழக் கொன்ற வெய்ய சினத்தையும் அகன்ற வாயையுமுடைய புலியேறு; அஞ்சுதக உரறும் - யாவரும் அஞ்சுமாறு முழங்காநிற்கும்; ஓசை கேளாது துஞ்சுதியோ - இவ்வோசையனைத்தையும் செவியில் ஏறட்டுக்கொள்ளாது நீ தூங்குகின்றனையோ? பேர் அஞர்