பக்கம் எண் :


268


பொருத புகர்படு நெஞ்சம் நீர் அடு நெருப்பில் தணிய - பெரிய துன்பம் வந்து மோதுதலானே குற்றப்பட்ட நெஞ்சத்தின் கொதிப்பானது நீர் பெய்த நெருப்புப் போலத் தணியும்படி; இன்று அவர் வாராராயின் நன்று - இன்று அவர் வாராது விட்டாலோ நல்லதாகும்; சாரல் விலங்கு மலை ஆர் ஆறு உள்ளுதொறும் - சாரலிலே குறுக்கிட்ட மலையின்கண்ணே செல்லுநெறியை நினையுந்தோறும்; நிறை இல் என்நெஞ்சு நிலம் பரந்து ஒழுகும் - நிலையில்லாத என் நெஞ்சமானது அந்த நிலத்தின்கண் பரந்து செல்லாநிற்கும்; யான் யாது செய்யமாட்டுவேன்? எ - று.

    (வி - ம்.) கம்மெனல் : ஓசையடங்குங்குறிப்பு. கிழிப்பு - குகை; பிளப்புமாம். பாடு - ஓசை. இறும்பு - சிறுகாடு; மலையுமாம். வலம்படுத்தல் - வலப்புறத்து விழும்படி கொன்று சாய்த்தல். அடிபட்டபொழுது வலப்பக்கத்தில் விழுந்ததனையே புலிதின்னுமென்ப; "இடம்படின் மிசையாப் புலி" என்றார், (29) அகத்தினும். புகர் - குற்றம். இல-ஏடீ என்னும் விளிப் பெயர். "எவன் இல குறுமக ளியங்குதி" என்பது அகம்; (12): தூ - வன்மை. உரறுதல் - முழங்குதல். விலங்குதல் - குறுக்கிடுதல். இஃதழிவில் கூட்டத்தவன் புணர்வு மறுத்தல். வானமும் எழிலி பாடோவாதென்றது இடத்து நிகழ் பொருளின் றொழில் இடத்தின் மேலேற்றிக் கூறப்பட்டது.

    அஞ்ச வேண்டுவழி யஞ்சா துறங்குதலாலே துஞ்சுதியோ வென்றாள். மெல்லியலாதலின், தூவிலாட்டியென்றதாம்.மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.

    (பெரு - ரை.) மலை ஆர் ஆறு - மலைகளிடையே பொருந்திய வழியென்க. அவர் இத்தகைய இரவின் வருதல் எங்கட்குப் பெருந்துன்பமே நல்குவதாகின்றது. .ஆதலால் வருதலினும் வாராமையே நன்று என இரவுக் குறி மறுத்து வரைவுகடாவியபடியாம்.

(154)
  
    திணை : நெய்தல்.

    துறை : (1) இஃது, இரண்டாங் கூட்டத்துத் தலைவியை எதிர்ப்பட்டுத் தலைவன் சொல்லியது.

    (து - ம்,)என்பது, இடந்தலைப்பாடுகொண்டு கூறுமாறு சென்று தலைமகளை வினாவிய தலைமகன் தன்னெஞ்சை நோக்கி, யான் இங்கு நின்றாளை ஏடீ, நின்றோய், நின்னை வணங்கி வினாவுகின்றேம்; நீதான் ஒரு தெய்வமகளோ பிறளொரு மடந்தையோ கூறாயென வினாவியபொழுது நகைதோன்றியது, கண்பனி பரந்தனவாதலின் முயங்குங்குறிப்புடைய மக்கட்பகுதியள் காணென மகிழ்ந்து கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு,"மெய்தொட்டுப் பயிறல்" என்னும் நூற்பாவின்கண் வரும் "பொய்பாராட்டல்" (தொல். கள. 11) என்னும் விதிகொள்க.