பக்கம் எண் :


272


எம்முடைய பலவாய துன்பமெல்லாம் தீரும்படியாக நீ பகற்பொழுதிலே ஆங்கு வந்து முயங்குவாயாக ! எ - று.

    (வி - ம்.) எருவை - கொறுக்கச்சி; கொறுக்காத்தட்டை யென வழங்கப்படுகிறது. அரியல் - கள். விடர் - மலைப்பிளப்பு. முகை - முழை; குகை. கோடு - கொடுமுடி. நீவியும் என்னும் எச்சம் அன்பினையென்னுங் குறிப்பு முற்றினாக்கத்தைக் கொண்டது.

    தங்களைப் பிரிதற்கு அவன் உள்ளம் பொருந்தாமையைப் பேரன்பினையென்றதனாலும் அவனைப் பிரிதற்குத் தங்கள் உள்ளம் பொருந்தாமையை நின்னும் நின்மலையும் பாடி யென்றதனாலுங் குறிப்பித்தாள். எமர் சீற்றத்திற் பெரியரெனவே அவர் ஏதமிழைப்பரென்றஞ்சி யச்சுறுத்தி அச்சமிக்க வழி இன்பஞ்சிறவாதாகலின் வரற்பாலையல்லையென் றறிவுறுத்தினாள். ஆரிருளும் காவலும் மழைமிகுதியுங் கூறியது இரவுக்குறி மறுத்ததாயிற்று. முன்பு பகற்குறி இடையீடு பட்டமை யானும் இரவுக்குறி மறுத்தமையானும் வரைவொடுபுகுவாயாக என்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.

    (பெரு - ரை.) ஆடுமழை முழங்க எங்குன்று இறுத்தது என்றது, ஒரோவழி மழைமிகின் யாங்கள் தினைகாத்தற்கு வாராதிருத்தலும் கூடும் என அப் பகற் குறியையும் மறுத்தபடியாம். எனவே இவ் வெல்லாப் படரும் அகல நீ வரைந்து கோடலே வழியாம் என வரைவு கடாவியவாறு மாயிற்றென்க. ஒதுங்கா-ஒதுங்கி எனினுமாம்.

(156)
  
    திணை : பாலை.

    துறை :இது, பொருள்வயிற் பிரிந்த தலைவன், பருவமுணர்ந்த நெஞ்சிற் குரைத்தது.

    (து - ம்,) என்பது, பின்னர் இளவேனிற்பருவத்து வருவேனென்று கூறிப் பொருள்வயிற்பிரிந்துபோன தலைமகன் சென்ற வினை முடிக்கு முன்னம், கூறிய பருவம் வருதலும் அதனையறிந்து தன்னெஞ்சினை 'நெஞ்சமே, இளவேனில் நாளிலே குயில் கூவும் பொழுதெல்லாம் அவ்வோசையை நம் காதலி கேட்டுக்கேட்டு மாறாது கலுழாநிற்குமே' யென் றழுங்கிக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, "மீட்டுவரவு ஆய்ந்த வகையின் கண்ணும்" (தொல். கற். 5) என்னும் விதிகொள்க.

    
இருங்கண் ஞாலத்து ஈண்டுதொழில் உதவிப் 
    
பெரும்பெயல் பொழிந்த வழிநாள் அமையத்துப் 
    
பல்பொறி அரவின் செல்புறங் கடுப்ப 
    
யாற்றறல் நுணங்கிய நாட்பத வேனில் 
5
இணர்துதை மாஅத்த புணர்குயில் விளித்தொறும்  
    
நம்வயின் நினையும் நெஞ்சமொடு கைம்மிகக்