(து - ம்,) என்பது, பகற்குறிவந்தொழுகுந் தலைமகனைத் தோழி வரைவுகடாவுவாளாய், 'யாம் பகற்பொழுதினை இங்குப்போக்கி மாலையிலே பாக்கம் போகுவமாயின் ஆங்கு வருவதற்குத் தலைவி வருந்தாநிற்கு'மென அவளது ஆற்றாமையும், 'யாமும் வருதியென்றழைக்கும் வலியிலேமாதலின் நினது தேர் எம் பாக்கத்தார் மகிழ்ந்து கொண்டாடும்படி ஆங்குவந்து தங்குவதாக' என்று தலைவன் தங்கும் வழி எதிர்கொண்டு தமர் வருவிருந்தயர்வதாகிய உலகியலுந் தெளியக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதியாற் கொள்க.
| மணிதுணிந்து அன்ன மாயிரும் பரப்பின் |
| உரவுத்திரை கெழீஇய பூமலி பெருந்துறை |
| நிலவுக்குவித்து அன்ன மோட்டுமணல் இடிகரைக் |